சி. சி. இராமசாமி படையாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
சி →அரசியல் வாழ்க்கை: clean up, replaced: வெற்றிப்பெற்று → வெற்றி பெற்று using AWB |
||
வரிசை 36:
1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி [[வன்னியர்|வன்னியருக்காக]] ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு]] மற்றும் [[செங்கல்பட்டு]] மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த [[எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்]] [[காமன்வீல் கட்சி]]யினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]] என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] சட்டமன்றத் தேர்தலில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக [[திராவிட நாடு]] கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.
ராம்சாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில்
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் [[சுதந்திராக் கட்சி]]யுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] தேர்தலில் [[திமுக]]வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980]] மற்றும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984]] பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக [[திண்டிவனம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமடைந்தார்.
|