பயோனிர் குமாரசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Fixed typo
வரிசை 2:
பயோனிர் குமாரசாமி (12-8-1887_18-8-1960) கன்னியாகுமாரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலின் வடக்குபகுதியில் அமைந்துள்ள வடசேரி பகுதியில் ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.ஏழ்மை காரணமாக அவரால் நான்காம் வகுப்புவரை மட்டுமே பள்ளியில் படிக்க முடிந்தது. சிறுகடைகளில் பணிசெய்தார்கள்.'''சென்னையில் வாழ்க்கை'''_ அந்த இளம் வயதிலேயே தாயாரின் ஆசியுடன் சென்னை சென்று, பல இன்னலுக்கிடையே ,சென்னை பல்கலைக் கழகத் தழிழ் பேரறிஞர் கே.என். சிவராஜபிள்ளை அவர்களின் துணையுடன் அடிசன் போக்குவரத்து நிறுவனத்தில் கம்மியராக சேர்ந்து வாகனவியலில் தேர்ச்சி பெற்றார்.அவர் பேருந்து ஓட்டுனர் உரிமமும் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் நாகர்கோவில் திரும்பி அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் சிலகாலம் ஓட்டுநராக பணியில் இருந்தார். அப்போது மதுக்கடை ஒன்றினை தொடங்கினார்.
'''கடின உழைப்பு-''' சிறுகச்சிறுக பொருள் சேர்த்து ஒரு பேருந்தை வாங்கினார்.அதனை நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் அவரே ஓட்டுநராக இருந்து நடத்தினார். பல பேருந்துகளை வாங்கி தன் நிறுவனத்தை விரிவு படுத்தி அதற்கு பயோனிர் மோட்டார் சர்வீசு என பெயரிட்டார். அன்று முதல் அவர் பயோனிர் குமாரசாமி என அழைக்கப் பட்டார். அந்நிறுவனம் பெரியதாக வளர்ந்தது. அவரது திறமை யும் வெளிப்பட்டது.'''இல்லறம்''' தக்க வயதில் நாகம்மையார் எனும் மங்கை நல்லாளை தன் வாழ்க்கை துணையாக ஏற்று நான்கு பெண் மக்களைப் பெற்றார்.
அவரது நிறுவனம் இரயில் போக்குவரத்திற்கு பயணச்சீட்டு வழங்கும் உரிம்ம் பெற்று இருந்த்து. தபால் போக்கு வரத்திற்கும் உதவுவதாக திகழ்ந்த்து.'''விடாமுய்றசி -''' 1929-ல் மலைத் தோட்டங்களை வாங்கி, காடுகளை வளம் கொழிக்கும் நிலங்களாக மாற்றினார். இரப்பர், பழவகைகள்,மரவள்ளிக் கிழங்கு,என பயிரிட்டு வளர்ந்தார்.சில இடங்களில் அரிசி ஆலைகளை நிறுவினார்.தரமான ஓடுகளை தந்தார்.1942-ல் இராஜகமங்கலத்தில் உப்பளம் அமைத்தார்.நாகர்கோவிலில் முதன்முதலாக சினிமா திரைஅரங்கம ஏற்ப்படுத்தினார்ஏற்படுத்தினார்.
நாகர்கோவில் நகருக்கு முதலில் மின்சாரம் கொண்டு வந்தார்.பயோனிர் பவர் ஹவுஸ் என பெயரிட்டார்.பார்வதிபுரத்தில் அவரது மனைவியின் பெயரில் ஒரு நூர்பாலையினை நிறுவினார்.பல கல்வி நிறுவனங்களுக்கு தாராளமாக நிதி உதவி உள்ளார்.ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியால் இன்றைய இளைய சமூகத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாக அவர் திகழ்கிறார். அவர்1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் இவ் உலக வாழ்க்கையை நீத்தார்.நாகம்கோவிலில் அரசு உதவிபெறும் பயோனிர் குமாரசாமி கல்லூரி ஒன்றினை அவரது குடும்பத்தினர் நடத்திவருகிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பயோனிர்_குமாரசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது