'''மயமதம்''' என்பது மிகப் பழைய காலத்தில் [[மயன்]] என்பவரால் எழுதப்பட்ட [[வாஸ்து சாஸ்திரம்|சிற்பசாஸ்திர]] நூலாகும். இது தென்னிந்தியாவிலேயேதென்னிந்தியாவில் ஆக்கப்பட்டதாகக்கருதப்படினும்ஆக்கப்பட்டது, இதுபழம்பெரும் எழுதப்பட்டமொழியானா மொழிதமிழில் வட மொழியாகிய [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதமாகும்]]இயற்றப்பெற்றது. இது மனிதனுக்கான வீடுகள் முதல் இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய [[திசை]], அதன் அளவுகள், பொருத்தமான [[கட்டிடப்பொருள்|கட்டிடப்பொருள்கள்]] என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன், [[விக்கிரகம்|விக்கிரகக்]] கலையும் இதன் உள்ளடக்கத்துள் அடங்குகிறது.