இதனை யார் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் உள்ளப் போதும், இவை அநேகமாக அரசப் பகுதிகளில் நடைப்பெறுவதால்நடைபெறுவதால் அரசே இதனை ஆயுததாரிகளை வைத்து செய்விப்பதான கருத்துகள் நிலவுகின்றன. அரசு இதனைச் செய்யவில்லை என்றால் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஒரு அரசுக்கே இதனை தடுத்து நிறுத்த வேண்டியப் பொறுப்பு இருக்கின்றது என்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன. இலங்கையில் பரவலாக இடம்பெறும் மனிதவுரிமைக்கு எதிரான ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] குற்றஞ்சாட்டியுள்ளது<ref>[http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=1371 கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு-ஹியுமன் ரைட்ஸ்]</ref>. [[ஆசிய மனிதவுரிமை ஆனையம்]] போன்ற அமைப்புகள் [[1980]] இலிருந்து தொடரும் ஆட்கடத்தல் மற்றும் காணமல் போதல் சம்பவங்களுக்கு [[இலங்கை]] அரசத் துணை ஆயுதக் குழுக்களும் அரச துணைப் படைகளுமே பொறுப்பு எனவும் கூறி வருகின்றது.<ref>[http://www.4tamilmedia.com/newses/srilanka/28640-2015-01-23-10-36-33?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29 வெள்ளை வான் கடத்தல்களில் கோத்தபாய ராஜபக்ஷவின் பங்கு(?); என்.வித்தியாதரன் சாட்சியமளிக்கிறார்!]</ref>