ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய அமைதிப் படை
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 2:
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]
 
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் [[கந்தசாமி பத்மநாபா|செயலாளர் நாயகம் க பத்மநாபா]] என்பவர் ஆவார். இவ்வியக்கம், [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தால் கலைக்கும் படி தடைசெய்யப்பட்டு, மீண்டும் [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு]]ப் பின்னர் [[இந்திய அமைதி காக்கும் படை]]யுடன் வந்து மீண்டும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் புலிகளுக்கு எதிராக இயங்கியது. இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாண சபை|வட-கிழக்கு மாகாண சபையில்]] இந்த இயக்கம் முதன்மையானதாக இயங்கியது அல்லது இந்தியாவால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக [[அ. வரதராஜப் பெருமாள்]] ஆக்கப்பட்டார். இவர் பெயரளவிலான ஒரு முதலமைச்சராக மட்டுமே இருந்தாரே தவிர, முதலமைச்சர் எனும் வகையிலான செயல்பாடுகள் எதுவும் நடைப்பெறவில்லைநடைபெறவில்லை. ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாகத்தில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் செல்வாக்கு கொண்டிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் இந்த இயக்கத்தின் முகாம்களும் மறைந்தன. இயக்க உறுப்பினர்களில் அதிகமானோர் இந்தியாவுக்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். மிகுதியானோர் இந்திய-இலங்கை ஒருங்கிணைவின் படி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினர்.
 
[[2001]] ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் [[சுரேஷ் அணி]] என அழைக்கப்படும் குழுவினர் [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] இணைந்து செயற்படுகின்றனர்.