அனுரா பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கித்தரவு தகவற்பெட்டி
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
[[1989]] ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் [[தொம்பே]] தேர்தல் தொகுதியில் அனுர போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]க்குள் ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து [[1993]] [[அக்டோபர் 11]] ஆம் நாள் அனுர பண்டாரநாயக்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி அதே மாதம் 29 ஆம் நாள் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்து கொண்டார். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவருக்கு உயர்கல்வி அமைச்சு வழங்கப்பட்டது. 1994 முதல் [[2000]] ஆண்டு வரை எதிர்கட்சி உறுப்பினராக செய்றபட்டார். [[2000]] [[அக்டோபர் 18]] ஆம் நாள் இலங்கையின் 11வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு [[2001]] [[அக்டோபர் 10]] ஆம் நாள் வரை வரை அப்பதவியிலிருந்தார்.
 
பின்னர் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டார். [[2001]] டிசம்பர் மாதம் நடைப்பெற்றநடைபெற்ற பொதுத்தேர்தலில் [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] தோல்வியைச் சந்தித்த போதும் [[கம்பகா மாவட்டம்|கம்பகா மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[2004]] ஆண்டு பொதுத்தேர்தலுக்காக இலங்கை சுதந்திரக் கட்சியையும், [[மக்கள் விடுதலை முன்னணி]]யையும் ஒன்று சேர்த்து கூட்டு முன்னணியொன்றினை நிறுவுவதில் அனுர பண்டாரநாயக்கா பாரிய பங்காற்றினார். அத்தேர்தலில் வெற்றி பெற்ற அனுர உல்லாசப்பிரயாண, கைத்தொழில், முதலீட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். [[2005]] ஆம் ஆண்டு [[லக்சுமன் கதிர்காமர்]] கொலையைத் தொடர்ந்து இலங்கை வெளிநாட்டமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இதன் போது உல்லசப்பிரயாண அமைச்சும் அவருக்கு வழங்கப்பட்டு கைத்தொழில், முதலீட்டு அமைச்சுகள் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது.
 
2005 ஆண்டின் அதிபர் தேர்தலுக்காக இவருக்கு பதிலாக [[மகிந்த ராஜபக்ச]] கட்சியால் தெரிவுச் செய்யப்பட்டர். மகிந்தவின் வெற்றிக்குப் பின்னர் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிபார்க்கப்பட்டாலும் உல்லசப்பிரயாண அமைச்சு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. [[2007]] ஜனவரி அமைச்சரவை மாற்றத்தின்போது உல்லசப்பிரயாண அமைச்சு பறிக்கப்பட்டு தேசிய மரபுரிமை அமைச்சு வழங்கப்பட்டது. [[2007]] [[பெப்ரவரி 9]] ஆம் நாள் [[மங்கள சமரவீர]], சிறிபதி சூரியாராச்சி ஆகியோருடன் சேர்த்து பதவி விலக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்குள் மகிநத ராஜபக்சவுடன் இணக்கப்பட்ட்டுக்கு வந்து தேசிய மரபுரிமை அமைச்சராக பதவியேற்றார். 2007 [[டிசம்பர் 14]] ஆம் நாள் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டதையடுத்து அமைச்சுப் பதவியை இழந்தார். தனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 5 ஆண்டுகள் மட்டுமே அரசில் அங்கம் வகித்தார்.<ref name="anura-kadir-BBC">{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4173570.stm|title=FM chosen from Sri Lankan dynasty|publisher=BBC News|date=22 August 2005}}</ref><ref name="anura-mahinda-BBC">{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4241464.stm|title=Sri Lanka ruling party sparks fly|publisher=BBC News|date=13 September 2005}}</ref><ref name="anura-burma-BBC">{{cite news|url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/09/070930_burma_bahila.shtml|title=Anura: Boycott Burmese products|publisher=BBC News|date=30 September, 2007}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அனுரா_பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது