பாரதிய ஜனதா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 21:
}}
 
'''பாரதிய ஜனதா கட்சி''' (மொழிபெயர்ப்பு: ''இந்திய மக்கள் கட்சி''; சுருக்கமாக '''பா. ஜ. க''') இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள்.
 
பாரதிய ஜனதா கட்சி, [[தீனதயாள் உபாத்தியாயா|தீனதயாள் உபாத்யாயாவால்]] 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், ''ஒருங்கிணைந்த மனிதநேயம்'' <ref>{{cite web | url = http://www.quora.com/India/What-is-the-crux-of-BJPs-official-ideology-integral-humanism| title = ஒருங்கிணைந்த மனிதநேயம் | accessdate = 2013-10-27 | publisher = quora.com }}</ref> என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. "இந்து தேசியவாதக் கட்சி" என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுய சார்புக் கொள்கையும், தேசியவாத கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று.
வரிசை 42:
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான [[அடல் பிகாரி வாஜ்பாய்]], புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. [[மொரார்ஜி தேசாய்]] பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது.<ref>Guha, pp. 538–540</ref>
 
=== உருவாக்கம் (1980 - 1980–) ===
பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட '''பாரதிய ஜனதா கட்சி''' என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.<ref>Guha, pp. 563–564</ref> காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, [[பஞ்சாப்]]பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார்.
 
பா. ஜ. க [[புளூஸ்டார் நடவடிக்கை]]யை எதிர்த்த முக்கியக் கட்சிகளுள் ஒன்றாகும். [[இந்திரா காந்தி]]யை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றதால் தில்லியில் 1984 ஆம் ஆண்டு [[தில்லி]]யில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பா.ஜ.க வெளிப்படையாகக் கண்டித்தது. பா.ஜ.க விடம் 1984 இல் இரண்டு நாடாளுமன்ற இடங்களே<ref name=Malik>{{cite journal|last=Malik|first=Yogendra K.|author2=V. B. Singh|title=Bharatiya Janata Party: An Alternative to the Congress (I)?|journal=Asian Survey|date=April 1992|volume=32|issue=4|pages=318–336|jstor=2645149|doi=10.2307/2645149}}</ref> இருந்த போதிலும் தனது கொள்கைகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்து, விரைவிலேயே இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது வாஜ்பாய், கட்சியில் முக்கிய இடத்திலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். [[இந்து தேசியம்|இந்து தேசியவாத]] கொள்கையுடைய பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.
 
[[படிமம்:Ab vajpayee.jpg|right|thumb|150px|[[அடல் பிகாரி வாஜ்பாய்]], பா.ஜ.க விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதமர் (1998–2004)]]
வரிசை 53:
திசம்பர் 6, 1992 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அமைதியான போராட்டத்திலிருந்து கலவரத்தில் இறங்கி, பாபர் மசூதியை இடித்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். விஷ்வ இந்து பரிஷத் இயக்கம் அரசால் தடை செய்யப்பட்டது. அத்வானி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.ndtv.com/news/india/report_sequence_of_events_on_december_6.php |title=Report: Sequence of events on December 6 |publisher=NDTV |accessdate=20 June 2012}}</ref><ref name=AlJazeera>{{cite web|url=http://english.aljazeera.net/news/asia/2009/11/2009112454918803725.html|title=Uproar over India mosque report: Inquiry into Babri mosque's demolition in 1992 indicts opposition BJP leaders|publisher=Al-Jazeera English |date=24 November 2009}}</ref> அயோத்தி விவகாரத்தை அரசியலாக்கியதாகக் கூறி பலரால் விமர்சனம் செய்யப்பட்டலும், கோடிக் கணக்கான இந்துக்களின் ஆதரவை பா.ஜ.க வென்று தேசிய முக்கியத்துவம் பெற்றது.
 
தில்லியில் 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1995 ஆம் ஆண்டு [[குஜராத்]]திலும், [[மகாராஷ்டிரா]]விலும் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வென்றது. திசம்பர் 1994 இல் நடந்த [[கர்நாடகா|கர்நாடக]] சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவம் பெற்றது. [[மும்பை]]யில், நவம்பர் 1995 இல் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில், மே 1996 இல் நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க வென்றால் வாஜ்பாய் பிரதமராவார் என்று அக்கட்சியின் தலைவர் அத்வானி அறிவித்தார். அத்தேர்தலில், பா. ஜ. க வெற்றி பெற்று அமைத்த அரசில் வாஜ்பாய் பிரதமரானார். இருப்பினும் பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 13 நாட்களில் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.<ref name="2014 வெற்றி" />
 
[[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணி]], 1998 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இம்முறை பா.ஜ.க ஏற்கனவே இருந்த கூட்டணிக் கட்சிகளான [[சமதா கட்சி]], [[அகாலி தளம்|சிரோமனி அகாலி தளம்]], [[சிவசேனா|சிவ சேனா]] போன்றவற்றோடு சேர்த்து, [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] மற்றும் [[பிஜு ஜனதா தளம்]] போன்ற கட்சிகளோடும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இவற்றுள் [[மகாராட்டிரம்|மகாராஷ்டிராவைச்]] சேர்ந்த சிவ சேனா மட்டுமே பா.ஜ.க வுடன் ஒத்த கொள்கையுடைய கட்சியாகும்.<ref name=WSWS>{{cite web|title=Hindu chauvinist-led coalition to form India's next government|url=http://www.wsws.org/en/articles/1999/10/bjp-o09.html|publisher=World Socialist Web Site|accessdate=27 September 2013|author=Keith Jones|date=9 October 1999}}</ref><ref>Sen, p. 254</ref> [[தெலுங்கு தேசம் கட்சி]] இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தது. மெலிதான பெரும்பான்மை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது.<ref>{{cite web|url=http://www.rediff.com/news/1998/mar/28bjp.htm |title=Rediff on the NeT: TDP helps Vajpayee wins confidence vote |publisher=Rediff.com |accessdate=4 January 2011}}</ref> ஆனால், அ. இ. அ. தி. மு. க தலைவர் [[ஜெயலலிதா]] அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
 
[[கார்கில் போர்|கார்கில் போரில்]] பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஜ்பாய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பா. ஜ. க மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் [[இந்தியாவின் உள்துறை அமைச்சர்|உள்துறை அமைச்சராகவும்]] பதவியேற்றனர். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகளும் நீடித்தது. வாஜ்பாய் தலைமையில் [[யஷ்வந்த் சின்கா]]வை நிதி அமைச்சராகக் கொண்ட இந்த அரசு, [[பி. வி. நரசிம்ம ராவ்]] அரசு தொடங்கிய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தியது.
 
இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதோடு, [[உலக வணிக அமைப்பு|உலக வர்த்தக அமைப்பின்]] வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தியது. விமான நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, அந்நிய முதலீடுகளை அனுமதித்தது போன்ற கொள்கைகள் [[சிறப்பு பொருளாதார மண்டலம்|சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்]] உருவாகத் துணை புரிந்ததோடு, புதிய துணை நகரங்கள் உருவாகவும், உள்கட்டமைப்பு சிறக்கவும், உற்பத்தியும் ஏற்றுமதியும் உயரவும் வழிவகுத்தது.
வரிசை 63:
தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலில் [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]] வென்று, [[மன்மோகன் சிங்|டாக்டர். மன்மோகன் சிங்கைப்]] பிரதமராகக் கொண்டு அரசமைத்தது.<ref name="Ramesh">{{cite news|last=Ramesh|first=Randeep|title=News World news Shock defeat for India's Hindu nationalists|url=http://www.theguardian.com/world/2004/may/14/india.randeepramesh|accessdate=10 December 2013|newspaper=The Guardian|date=14 May 2004}}</ref><ref name="Editorial">{{cite news|last=Editorial|title=The Meaning of Verdict 2004|url=http://www.hindu.com/2004/05/14/stories/2004051406131000.htm|accessdate=10 December 2013|newspaper=The Hindu|date=14 May 2004|location=Chennai, India}}</ref>
 
கர்நாடகாவில், மே 2008 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. இதுவே தென்னிந்திய மாநிலமொன்றில் பா.ஜ.க வென்றது முதல் முறையாகும். ஆனால் 2013 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா. ஜ. க தோற்று தனது ஆட்சியைக் காங்கிரசிடம் இழந்தது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா. ஜ. க மீண்டும் தோற்றதனால், மக்களவையில் அதன் பலம் 116 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த செயல்பாடே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
 
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பா. ஜ. க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.<ref name="2014 வெற்றி">{{cite web|title=1984-ல் இரண்டே இடங்கள்... 2014-ல் தனிப் பெரும்பான்மை: பாஜகவின் சாதனைப் பயணம்!|url=tamil.thehindu.com/india/1984ல்-இரண்டே-இடங்கள்-2014ல்-தனிப்-பெரும்பான்மை-பாஜகவின்-சாதனைப்-பயணம்/article6016689.ece?homepage=true&theme=true|publisher=தி இந்து|accessdate=16 மே 2014|author=|date=16 மே 2014}}</ref> ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் 10 இடங்கள் மிகுதியாக வென்றதால் தனிப்பெரும்பான்மையோடு கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமலே தனித்து ஆட்சி அமைத்தது.<ref>{{cite web|title=தனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி|url=http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-21%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/article6017228.ece|publisher=தி இந்து|accessdate=17 மே 2014|author=|date=17 மே 2014}}</ref>
 
== பொதுத் தேர்தல்களில் ==
வரிசை 152:
 
=== இந்துத்துவம் ===
[[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]] என்கிற அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையான [[இந்துத்துவம்|இந்துத்துவத்தை]] பா.ஜ.க பலமாக ஆதரிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றுக்கு மேற்கத்தியக் கொள்கைகளைவிட இந்துத்துவமே உகந்தது என்பது பா.ஜ.க வின் நிலைப்பாடு. பா. ஜ. க வின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டாலும், கலாசார தேசியவாதம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும் கொள்கையே என்பது பா. ஜ. க வின் வாதம்.
 
காங்கிரஸ் கட்சி, போலியான மதசார்பின்மை கொள்கையை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்றும் [[சிறுபான்மையினர்|சிறுபான்மையினருக்கு]] ஆதரவாக செயல்படுவதாகக் கூறி இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் இந்திய கலாசாரத்திற்கு எதிராக மேற்கத்தியக் கலாசாரத்தைப் பரப்புகிறது என்றும் பா.ஜ.க, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காகவே அவர்களை ஆதரிக்கிறது என்றும் பா. ஜ. க கூறுகிறது.
 
அடல் பிகாரி வாஜ்பாயின் கருத்துப்படி, ஐரோப்பிய [[சமய சார்பின்மை|மதசார்பின்மைக்]] கருத்தியல் என்பது இந்தியாவின் கலாசாரத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மோகன்தாஸ் காந்தியால்]] முன்மொழியப்பட்டக் கோட்பாடான ''சர்வ தர்ம சம்பவ'' என்பதே இந்தியாவின் பாரம்பரியத்திற்கு உகந்த மதசார்பின்மை என்பது பா. ஜ. க வின் கருத்து.<ref>Constitution and Rules (as amended by the National Council at Gandhinagar, Gujarat, on 2nd May 1992) of the Bharatiya Janata Party, p.3-4.</ref> வாஜ்பாய், இந்திய மதசார்பின்மையைப் பின்வருமாரு விளக்குகிறார்:
:அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதே காந்தியின் ''சர்வ தர்ம சம்பவ'' கோட்பாடாகும்.<ref>Atal Bihari Vajpayee. "The Bane of Pseudo-Secularism". In C. Jaffrelot (ed.), ''Hindu Nationalism: A Reader''. Delhi: Permanent Black, 2007.</ref> இக்கோட்பாடு எந்த மதத்திற்கும் எதிரானதல்ல; அனைத்து மதங்களையும் சமமானதாகவே பார்க்கிறது. எனவே, இக்கோட்பாடே இந்தியாவிற்குகந்த கொள்கை; இதுவே மேற்கத்தியக் கொள்கைகளைவிட சிறந்தது.
 
வரிசை 162:
:இக்கட்சி, இந்தியாவை வளமான மற்றும் பலமான தேசமாக வளர்க்க உறுதி பூண்டுள்ளது. பண்டைய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன மற்றும் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவோம். சாதி, சமய மற்றும் பாலின வேறுபாடின்றி ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்கி அதில் அனைவருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதி, சம வாய்ப்பு, கருத்து மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரம் கிடைக்க இக்கட்சி பாடுபடும். இக்கட்சி, இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டு அதன் கொள்கைகளான மதசார்பின்மை, நேர்மை, ஜனநாயகம், ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் உரிமைகளைக் காக்கும்.
 
பா.ஜ.க அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி வருகிறது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசுவைக் கொல்வதையும் உண்பதையும் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய கலாசாரத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்க வேண்டும் என்றும் பா. ஜ. க கோரி வருகிறது. வாஜ்பாய் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த [[முரளி மனோகர் ஜோஷி]], கல்லூரி பாடத்திட்டத்தில் வேத சோதிடத்தையும் சேர்க்க உத்தரவிட்டதோடு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களையும் செய்தார்.<ref>{{cite web|title=Indian Astrology vs Indian Science|url=http://www.bbc.co.uk/worldservice/sci_tech/highlights/010531_vedic.shtml|publisher=BBC World Service|accessdate=17 January 2014}}</ref>
 
பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சி செய்த போது இந்துகளின் புனித நூலான [[பகவத் கீதை]]யை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் பா.ஜ.க மதமாற்றங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கும் ஆதரவளிக்கிறது. பா.ஜ.க இந்திய அரசியலமைப்பை மதிப்பதாகக் கூறினாலும், சில பா.ஜ.க தலைவர்கள், இந்தியாவை ''இந்து நாடாக'' அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.<ref name=Guha?? /><ref name="The Rise of the BJP">{{cite journal|last=Seshia|first=Shaila|title=Divide and Rule in Indian Party Politics: The Rise of the Bharatiya Janata Party|journal=Asian Survey|date=November 1998|volume=38|issue=11|pages=1036–1050|accessdate=16 January 2014|doi=10.1525/as.1998.38.11.01p0406o}}</ref><ref name="Malik 1992 318–336">{{cite journal|last=Malik|first=Yogendra K.|author2=V. B. Singh|title=Bharatiya Janata Party: An Alternative to the Congress (I)?|journal=Asian Survey|date=April 1992|volume=32|issue=4|pages=318–336|accessdate=16 January 2014}}</ref><ref name="Gillan 2002 73–95">{{cite journal|last=Gillan|first=Michael|title=Refugees or Infiltrators? The Bharatiya Janata Party and "Illegal" Migration from Bangladesh|journal=Asian Studies Review|date=March 2002|volume=26|issue=1|pages=73–95|accessdate=16 January 2014|doi=10.1080/10357820208713331}}</ref> ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாற்றுக் கருத்துடைய கட்சிகளும் அடங்கியுள்ளதால் பா.ஜ.க தனது இந்துத்துவா கொள்கையை தளர்த்தியது.
 
இந்தியாவின் முதல் பிரதமரான [[ஜவகர்லால் நேரு]]வை பா.ஜ.க, இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கு, கஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பதில் செய்த தவறுகள் போன்றவற்றிற்காகக் கடுமையாக விமர்சித்தது.<ref name="The Rise of the BJP" /> ஆயினும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான [[சர்தார் வல்லப்பாய் படேல்|வல்லபாய் படேலை]], இந்தியாவை ஒருமைப்படுத்தியதற்காக பா. ஜ. க பாராட்டியுள்ளது.
 
[[அம்பேத்கர்|டாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின்]] நினைவு நாளை பா.ஜ.க அதிகாரப்பூர்வமாக அனுசரித்தாலும், [[நரேந்திர மோதி|நரேந்திர மோடி]] போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தாலும், மேல் சாதி இந்துக்களின் கட்சியே பா.ஜ.க என்று விமர்சிக்கப்படுகிறது.{{cn}}
 
[[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின்]] மீது எழுந்த, '"இசுலாமியர்களுக்கு எதிரானது'",' "பாசிசக் கொளகையுடையது'", '"மதக் கலவரத்தைத் தூண்டுகிறது'" போன்ற விமர்சனங்களால் பா.ஜ.க வும் பாதிக்கப்பட்டுள்ளது. [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்|வினாயக் தாமோதர் சாவர்க்கரின்]] கொள்கைகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அது காந்திக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது. [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] மீதுள்ள காந்தியின் கொலைப் பழி பா.ஜ.க வையும் பாதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், காந்தியின் இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கையும், [[இந்தியப் பிரிவினை]]க்கு அவர் ஒப்புதல் அளித்ததையும் கடுமையாகக் கண்டித்தது. பா. ஜ. க காந்திக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரானது என்கிற வாதத்தை அக்கட்சி முழுமையாக மறுக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் சிறுபான்மையினரை அவர்களது வாக்குகளுக்காகவே ஆதரிக்கின்றனர் என்று பா.ஜ.க கூறுகிறது.
 
=== பொருளாதாரக் கொள்கைகள் ===
பா.ஜ.க வும் அதன் வழி வந்த கட்சிகளும், [[மார்க்சியம்|மார்க்சிசத்தையும்]], இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரசின் [[சமூகவுடைமை]]ப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தன.<ref name="Nationalist Economic Integration">{{cite journal|last=Shulman|first=Stephen|title=Nationalist Sources of International Economic Integration|journal=International Studies Quarterly|date=September 2000|volume=44|issue=3|pages=365–390|accessdate=25 January 2014|doi=10.1111/0020-8833.00164}}</ref> [[சுதேசி இயக்கம்|சுதேசிக் கொள்கையையும்]], உள்நாட்டு நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் பா.ஜ.க பலமாக ஆதரித்ததோடு, வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்றது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில், வாஜ்பாய் அரசு 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள், பொருளாதார [[தாராளமயமாக்கல்]] போன்றவற்றைத் தொடர்ந்ததால், தேக்கத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது.<ref name="Nationalist Economic Integration" />
 
பா.ஜ.க தலைமையிலான அரசு, [[தங்க நாற்கரச் சாலைத் திட்டம்|தங்க நாற்கர சாலை]] முதலிய சில முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, அந்நிய முதலீட்டை ஈர்க்க [[கட்டற்ற வணிகம்|கட்டற்ற வர்த்தகத்தையும்]] அறிமுகப்படுத்தியது. பா. ஜ. க ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், இந்தியாவின் ஏழை மக்களைவிட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அக்கட்சித் தோற்றது.<ref name="Ramesh" /><ref name="Editorial" /><ref>{{cite journal|last=Bobbio|first=Tommaso|title=Making Gujarat Vibrant: Hindutva, development and the rise of subnationalism in India|journal=Third World Quarterly|year=2012|volume=33|issue=4|pages=653–668|accessdate=26 January 2014}}</ref><ref>{{cite news|last=Ghouri|first=Nadene|title=The great carbon credit con: Why are we paying the Third World to poison its environment?|url=http://www.dailymail.co.uk/home/moslive/article-1188937/The-great-carbon-credit-eco-companies-causing-pollution.html|work=Daily Mail|accessdate=26 January 2014|location=London}}</ref>
 
=== பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் ===
வரிசை 188:
[[படிமம்:Vladimir Putin in India 2-5 October 2000-11.jpg|right|thumb|முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் [[விளாதிமிர் பூட்டின்|விளாதிமிர் புதின்]] (இடது). வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டதோடு பல முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின]]
 
[[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] நட்புறவு பாராட்டிய காங்கிரஸ் அரசை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வந்துள்ளது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில் [[அமெரிக்கா]]வுடனான உறவை இந்தியா பலப்படுத்திக்கொண்டது.<ref name="Chaulia: Alternative to Nehru">{{cite journal|last=Chaulia|first=Sreeram|title=BJP, India’s Foreign Policy and the "Realist Alternative" to the Nehruvian Tradition|journal=International Politics|date=June 2002|volume=39|pages=215–234|accessdate=8 February 2014|doi=10.1057/palgrave.ip.8897388}}</ref> இந்திய-அமெரிக்க உறவுகள், 2000 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான [[பில் கிளின்டன்|பில் கிளின்டனின்]] இந்திய வருகையின்போது மேலும் முன்னேற்றமடைந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் [[அல் காயிதா]] மற்றும் [[தலிபான்]] போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவிற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்கியது. இதற்குப் பிரதியாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் உதவியது.
 
இந்தியாவின் எதிரிகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளையும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா மேம்படுத்திக் கொண்டது.<ref name="Chaulia: Alternative to Nehru" /><ref name="Harris 2005">{{cite journal|last=Harris|first=Jerry|title=Emerging Third World powers: China, India and Brazil|journal=Race & Class|year=2005|volume=46|issue=7|doi=10.1177/0306396805050014|accessdate=8 February 2014}}</ref> வாஜ்பாய், 1998 இல் பாகிஸ்தான் சென்று தில்லி-லாகூர் பேருந்துப் போக்குவரத்து சேவையைத் துவக்கி வைத்தார். 1998 அணு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு நலிவடைந்திருந்த இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்ள, இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது.<ref name="Chaulia: Alternative to Nehru" />
வரிசை 224:
 
=== பா.ஜ.க வின் தற்போதைய மாநில முதல்வர்கள் ===
*விஜய் ரூபானி – [[குஜராத்]].
*[[தேவேந்திர பத்னாவிசு|தேவேந்திர ஃபத்னாவிஸ்]] – [[மகாராட்டிரம்]].
*[[மனோகர் லால் கட்டார்]] – [[அரியானா|ஹரியானா]].
*ஜெய்ராம் தாகூர்- இமாாச்சலப் பிரதேசம்.
*மனோகர் லால் கட்டர்- உத்தரகாண்ட்.
*யோகி ஆதித்யநாத்- உத்திரப் பிரதேசம்.
*ரகுபர் தாஸ் - [[ஜார்கண்ட்]].
 
== கட்சித் தலைவர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரதிய_ஜனதா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது