இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆதிக்கம் தொடங்கியுள்ளது. ஆப்ரிக்கா கண்டத்தின் சுதந்திரம் லிபியாவிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. லிபியா 1951-இல் விடுதலைப்பெற்றது. லிபியாவில் தொடங்கி 1960 காலக்கட்டம்காலகட்டம் வரை ஆப்ரிக்காவிற்கு தொடர்ந்து விடுதலைகள் கிடைக்கப்பெற்றன. 1960-இல் பிரன்ச் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பல விடுதலைப்பெற்றன. அங்கோலா , மொசாம்பிக் ஆகிய நாடுகள் போர்ச்சுகளிடமிருந்து 1975-ஆம் ஆண்டு விடுதலைப் பெற்றன. டிஜிபோடி பிரான்ஸிடமிருந்து 1977-இல் விடுதலை வாங்கியது. மேலும் சில நாடுகள் ஐக்கிய ராச்சியத்திலிருந்தும், தென் ஆப்ரிக்காவிடமிருந்தும் விடுதலைப் பெற்றன. பல நாடுகள் விடுதலைப் பெற்றவுடன் தனது நாட்டின் பெயர்களை மாற்றம் செய்துக் கொண்டன.