அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நவீன தேசிய அரசுகள்: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 73:
==நிலவுடமையாளர் அரசு==
 
உரோமைப் பேரரசில் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. குடிமைச் சேவைகளில் காணப்பட்ட துணிவின்மைப் போக்குகள், அச்சவுணர்வு தன்மைகள் ஆகியவற்றால் மக்களிடையே அவநம்பிக்கைகள் உருவாயின. இவற்றிலிருந்து பேரரசை மீட்டெடுப்பது என்பது கடினப் பணியாக இருந்தது. உரோமைப் பேரரசு இதன்காரணமாகப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இக்காலக்இக்கால கட்டத்தில் நிலவுடமையாளர்கள் எழுச்சிப் பெற்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதனால், நிலவுடமையாளர்கள் தம்மிடம் பணியாற்றும் எளியவர்கள் மீது செலுத்தப்பட்டு வந்த அதிகாரம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://tkm.politicalmanac.com/2014/09/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF/&ved=0ahUKEwiS7MaT8OrUAhVGsI8KHfb5AogQFgg2MAQ&usg=AFQjCNGTOfKLjRMsXB7NN6qbFjGWEJ6-rg">{{cite web | url=http://tkm.politicalmanac.com/2014/09/அரசு-தோற்றமும்-வளர்ச்சி/ | title=அரசு: தோற்றமும் வளர்ச்சியும் | accessdate=2 சூலை 2017}}</ref>
 
இவ் அரசில் ஒவ்வொரு மாவட்ட நிலப்பகுதியும் ஒவ்வொரு நிலவுடமையாளரின் கீழ் இருந்தது. இவர்கள் தம்மை குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு ஆட்சிசெய்து வரத் தொடங்கினர். உரோமை அரசியல் அதிகாரமானது நிலவுடமையுடன் தொடர்புடையதாக இருந்தது. இச்சூழ்நிலையில் வலிமை பெற்ற நிலவுடமையாளர்கள் வலிமை குன்றிய நிலவுடமையாளர் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர். இதன்விளைவாக, மீளவும் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின. போர் நிகழ்வுகள் மற்றும் திருமண உறவுகள் மூலமாக சிற்றரசுகள் பேரரசுகளாக மாற்றம் பெற்றன. நிலவுடமைக் கோட்பாட்டின்படி அரசன் இறைவனின் ஊழியனாகச் செயல்பட்டு அரசினை வழிநடத்த கடமைப்பட்டவனாவான். அதுபோல, அரசர்கள் தமது இறைமையினை நிலவுடமையாளர்களுக்குச் செலுத்தும் விசுவாசத்தினூடாகப் பெற்றுக்கொள்ளும் வழக்கிருந்தது. இதனால், அரசன் இறந்தபின் அவனுடைய அதிகாரங்களும் பொறுப்புகளும் நிலவுடமையாளர்களுக்குச் சொந்தமானது.
"https://ta.wikipedia.org/wiki/அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது