இயற்பியலின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
 
=== பண்டைய கிரேக்கம் ===
இயற்கையையும் அதன் கோட்பாடுகளையும் புரிந்துக்புரிந்து கொள்ள கிரேக்கர்கள் கிமு 650 முதலே முற்படுகின்றனர். [[சாக்கிரட்டீசு|சாக்கிரட்டீசிற்கும்]] முன்பு வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞரான [[தேலேஸ்]] அறிவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். ஏனெனில் இவர் மதக்கோட்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் மறுத்து ஒவ்வொரு நிகழ்விற்கும் பின் அறிவியல் காரணங்கள் உள்ளது என்று அறிவுறுத்தினார்.<ref>"This shift from ecclesiastical reasoning to scientific reasoning marked the beginning of scientific methodology." Singer, C., ''A Short History of Science to the 19th Century'', Streeter Press, 2008, p. 35.</ref> தேலேஸ் கி.மு. 580 இல் சில அறிவியல் முடிவுகளையும் வெளியிட்டார். அதன்படி தண்ணீர்தான் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படைக்கூறு என்று கூறினார். உராயப்பட்ட பசை மற்றும் காந்தங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையை பற்றியும் விளக்கினார். இவரே முதல் முறை பதிவு செய்யப்பட்ட அண்டவியல் கோட்பாடுகளை கூறியவர். [[அனாக்சிமாண்டர்]] என்னும் மெய்யியல் அறிஞர் அவரின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்காக நன்கு அறியப்படுபவர் ஆவார். இவர் தேலேஸின் கோட்பாடுகளிற்கு மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டார் . அதன்படி நீருக்கு பதிலாக எபிரான் எனும் பொருள் அனைத்துப் பொருட்களுக்கும் மூலக்கூறு என்று கூறினார். ஹெராக்லிடஸ் என்பவர் கிமு 500 வாக்கில் அடிப்படை இயற்பியல் விதி ஒன்றை உருவாக்கினார். அவ்விதியின் படி இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளுமே நிலையான தன்மையில் இருப்பது இல்லை என்றும், அவை மாறிக்கொண்டே இருக்கும் என்றும் கூறினார். இவ்விதியினால் செவ்வியற்பியலின் அறிஞராக இவர் கருதப்படுகிறார். கி.மு 5,4, 3 ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்கத்தில் செவ்வியற்பியல் மெதுவாக வளரத் தொடங்கியது. [[பிளேட்டோ]]வின் மாணவரான அரிஸ்டாட்டில் கி.மு 4 இல் [[மீவியற்பியல்|மீவியற்பியலில்]] கோட்பாடுகளை வகுத்தார். இவர் வெளியிட்ட விதிகள் ''அரிஸ்டாட்டிலின் இயற்பியல்'' என்று வழங்கப்பட்டது. அதில் அவர் [[இயக்கம் (இயற்பியல்)|இயக்கங்கள்]] பற்றியும், [[ஈர்ப்பு விசை]]கள் குறித்தும் கூறியிருந்தார். அரிஸ்டாட்டில் ''ஈத்தர்'' எனும் ஒரு பொருளினால் உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உருவாகி இருக்க வேண்டும் அல்லது பூமி, காற்று, வானம், நெருப்பு ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
 
==இந்தியா மற்றும் சீனா==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியலின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது