ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
1891 இல் வொய்ட்ஹெட் [[பிரான்ஸ்|பிரான்சில்]] வளர்ந்த ஈவலின் வேட் என்னும் [[அயர்லாந்து]]ப் பெண்மணியை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். முதல் உலகப்போரில் ராயல் பிளையிங் கோரில் (Royal Flying Corps, அரச வானூர்தியர் குழுவில்) பங்குகொண்ட ஒரு மகன் இறந்துவிட்டார். இக்காலப்பகுதியில் அமைதிக்கொள்கையை வலியுறுத்தியதால் பெர்ட்ரண்ட் ரசல் 1918 இன் பெரும் பகுதியை சிறைச்சாலையில் கழித்தார். வொய்ட்ஹெட், ரசலை சிறையில் சென்று பார்த்தார் எனினும், அமைதிக்கொள்கையை பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை; அதேபோல ரசலும் வொய்ட்ஹெடின் [[பிளேட்டோவியம்]] (Platonism), [[யாவும் உள்ளமுடைமை]] (Panpsychism) என்னும் கொள்கைகள்பால் இருந்த ஈடுபாட்டை கிண்டல் செய்தார். உலகப்போருக்குப் பின்னர் வொய்ட்ஹெடும், ரசலும் அறிவுறவு கொள்ளவில்லை. வொய்ட்ஹெட் பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவின் 1925 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்புக்கு எந்த கருத்தூட்டமும் தரவில்லை.
 
வொய்ட்ஹெட் எப்பொழுதுமே, குறிப்பாக 1890களில், [[இறையியல்|இறையியலில்]] ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய குடும்பம் சர்ச் ஆஃவ் இங்கிலாந்தில் (Church of England) நிலைப்பெற்றிருந்தனர்நிலைபெற்றிருந்தனர்:இவருடைய தந்தையும், அவர் உடன்பிறப்புகளும் சர்ச் விக்கார்களாக இருந்தனர், வொய்ட்ஹெடின் உடன்பிறந்தார் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[சென்னை]]யில் பிசப்பாக (bishop) இருந்தார். வொய்ட்ஹெடின் மனைவியின் உந்துதலாலும், கார்டினல் நியூமன் அவர்களின் எழுத்துகளாலும், வொய்ட்ஹெட் ரோமன் கத்தோலிக்கம் மீது ஆர்வம் கொண்டார். முதல் உலகப்போருக்கு முன்னர் இவர் தன்னை கடவுள் ஐயப்பாட்டாளர் அல்லது கடவுள் கொள்கை பற்றிய சாய்வு ஏதுமற்றவராக இருந்தார். பின்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக மாறினார். எனினும் எந்த திருச்சபையிலும் முறைப்படி சேரவில்லை. இறையொருமையாளர்கள் (யூனிட்டேரியன் கொள்கையர்) இவரை தங்கள் நண்பர் என்று கூறுவர்.
 
வொய்ட்ஹெட் [[இயற்பியல்|இயற்பியலிலும்]] மிகுந்த ஈடுபாடு காட்டினார். இவருடைய பெல்லோ (Fellow) எனும் மேல் உறுப்பினர் பெருமைக்கான ஆய்வுரையில் [[ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்]] அவர்களின் [[மின்சாரம்]] [[காந்தம்]] பற்றிய கருத்துக்களை அலசினார். [[கணிதவியல்]] மற்றும் இயற்பியல் பற்றிய வொய்ட்ஹெட்டின் பார்வையும் கண்ணோட்டமும் தூய அறிவியல்நோக்கு என்பதைவிட கூடுதலான மெய்யியல் நோக்கு எனலாம். அத்துறைகளின் தனிப்பட்ட கருத்துகள் கேள்விகளை விட அவற்றின் பரந்த வளர்ச்சி வாய்ப்பும் இயல்பும் பற்றியே அவர் அதிகம் நுணுகி நோக்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரட்_நார்த்_வொய்ட்ஹெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது