'''பருத்தித்துறை பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு''' அல்லது '''வடமராட்சி வடக்கு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு''' (''Vadamaradchi North Divisional Secretariat'') [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 35 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[துன்னாலை]], [[தும்பளை]], [[புலோலி]], [[மந்திகை]], [[பருத்தித்துறை]], [[அல்வாய்]], [[பொலிகண்டி]], [[வல்வெட்டித்துறை]], [[கெருடாவில்]], [[தொண்டைமானாறு]], [[வியாபாரிமூலை]], [[கற்கோவளம்]], [[வல்லிபுரம்]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இந்தியப் பெருங்கடல் இதன் வடக்கு, கிழக்கு ஆகிய எல்லைகளில் உள்ளது. மேற்கில் தொண்டைமானாறு நீரேரியும், தெற்கில் [[கரவெட்டி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|கரவெட்டி]], [[மருதங்கேணி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|மருதங்கேணி]] ஆகிய பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ளது.
இதன் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர் ஆகும்<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.