வைசாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: பெளத்தம் → பௌத்தம் using AWB
வரிசை 3:
'''புத்த பூர்ணிமா''' (இந்தியாவில்) அல்லது '''வைசாகம்''' அல்லது '''விசாகம்''' (இலங்கையில்) (''Wesak'') [[மே]] மாத [[பௌர்ணமி]] (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து [[பௌத்தம்|பௌத்தர்]]களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் [[கௌதம புத்தர்|புத்தரின்]] வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
 
இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.<ref>{{cite book|title=World Religions: it is celebrated to mark the birth, enlightenment and the passing away of the Lord Buddha. An Introduction for Students|first=Jeaneane D. |last=Fowler|publisher= Sussex Academic Press|year= 1997|isbn=1-898723-48-6}}</ref><ref>[http://www.buddhanet.info/wbd/ The World Buddhist Directory]</ref> <ref>{{cite web|url=http://www.accesstoinsight.org/lib/thai/lee/visakha.html |title=Visakha Puja |publisher=Accesstoinsight.org |accessdate=20 March 2012}}</ref>
 
# [[கௌதம புத்தர்|சித்தார்த்த கௌதமர்]] [[லும்பினி]] (இன்றைய [[நேபாளம்]]) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
வரிசை 13:
== இலங்கையில் வெசாக் நாள் ==
[[படிமம்:Vesak_in_SriLanka.jpg|thumb|300px|right|[[கொழும்பு|கொழும்பில்]] வெசாக் பந்தல் ஒன்று]]
இது [[இலங்கை]] பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும். "வெசாக்" மே மாத [[பௌர்ணமி]] (முழு நிலா) நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி [[இலங்கை]]யில் [[பெளத்தம்பௌத்தம்|பெளத்தபௌத்த]] [[சிங்களவர்|சிங்களவர்களால்]] சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். "வெசாக்" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது.
 
== வெசாக் கூடு ==
குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் வீடுகளில் மூங்கில் மற்றும் ஈக்கிள் குச்சிகளால் கூடுகள் செய்யப்பட்டு மெல்லிய கடதாசிகளினால் வடிவமைக்கப்பட்டு அதற்குள் [[மெழுகுவர்த்தி]]யை ஏற்றி வீடுகளின் முன்னே உயரத் தொங்கவிடுவர். இவை இலங்கையில் “வெசாக் கூடு” என்று அழைக்கப்படுகின்றது. இந்த வெசாக் கூடுகள் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது கலைவண்ணத்தை இங்கே காட்டியிருப்பர்.
 
இதைத் தவிர வீடுகளில் தொங்கவிடக் கூடிய சிறிய வகை வெசாக் கூடுகள் கடைகளில் விற்பனை செய்யப்படும். இக்காலப்பகுதியில் இவை அதிகம் விற்பனையாகும். இவைகளும் உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி தொங்கவிடுபவைகள் தான். மின்சாரம் வழங்கப்படும் பிரதேசங்களில் மெழுகுவர்த்திக்குப் பதிலாக மின்விளக்குகளை கூடுகளின் உள்ளே தொங்கவிடுவர்.
 
== வெசாக் தோரணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வைசாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது