ஈழப் புரட்சி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 104:
}}
 
'''ஈரோஸ்''' எனும் சுருக்கப்பெயரால் பிரபல்யமாக அறியப்படும் '''ஈழப்புரட்சி அமைப்பு'''<ref>{{cite news|url=http://noolaham.net/project/142/14116/14116.pdf|title=இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்|accessdate=066 January 2016 | pages=9}}</ref> ([[ஆங்கிலம்]]:Eelam Revolutionary Organisation [[சிங்களம்]]:ඊළම් විප්ලවවාදී සංවිධානය) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், [[இலங்கை]] தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் [[இடதுசாரி]] [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கமாகும்]]. [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினியம்|லெனினிச]] சிந்தனைகளை வழிக்காட்டியாக கொண்ட இவ் அமைப்பு பருத்திதுறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஈழம் எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் 1990 ஆம் ஆண்டு [[தமிழீழ விடுதலைப் புலிகள்| விடுதலைப்புலிகளின்]] அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல்,இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துக்கள், வளங்கள் விடுதலை புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன<ref>{{cite news|url=http://padippakam.com/document/general/Notes/1039.pdf|title=1990-08-16 பத்திரிக்கை செய்திகள்|accessdate=066 January 2016 }}</ref>. பெருமளவிலான உறுப்பினர்கள் [[வே. பாலகுமாரன் | வே.பாலக்குமாரின்]] தலைமையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைபுலிகளுடன்]] இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 ஆம் மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
 
 
==வரலாறு==
===தோற்றமும் வளர்ச்சியும்===
1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3ஆம் திகதி லண்டன் நகரில் [[இ. இரத்தினசபாபதி|இ.இரத்தினசபாபதினால்]] ஈரோஸ் அமைப்பு தாபிக்கப்பட்டது<ref>{{cite news|url=http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf|title=ஈழவர் இடர்தீர - ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூல்|accessdate=066 January 2016 }}</ref>. அமைப்பின் தாபிப்பு பணிகளில் [[இ. இரத்தினசபாபதி|இ.இரத்தினசபாபதியுடன்]] , [[வே. பாலகுமாரன்]], [[சங்கர் ராஜி]], [[பாலநடராஜ ஐயர்]],[[அருளர்|அருட்பிரகாசம்]] ஆகியோரும் பங்கெடுத்தனர்.
 
===அரசியல் நடவடிக்கைகள்===
வரிசை 118:
ஈரோஸ் அமைப்பு தமிழர் பகுதிகளில் மேலும் பல பண்ணைகளை உருவாக்கி அமைப்பு உறுப்பினர்களின் சீவனப்பாட்டை ஈடுசெய்ததுடன், அரசியல் வகுப்புக்களை நடாத்தி உறுப்பினர்களை பயிற்றுவித்தது{{cn}}.
 
ஈரோசின் ஆய்வு பிரிவான ஈழ ஆய்வு நிறுவனம் மூலம் பல வௌியீடுகளை செய்தும், கருத்தரங்குகளை நடாத்தியும்,திட்ட பிரகடன மாநாடுகளை நாடத்தியும், அமைப்பின் பத்திரிக்கை மூலமும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஈழப்போரட்டத்தில் ஈடுப்பட்ட பிரதான இயக்கங்களில் ஒன்றாக ஈரோஸ் அமைப்பு வளர்ச்சியடைந்தது. வடக்கு, கிழக்கு, மலையகம் பிரதேசங்களில் செயற்பட்ட ஈரோஸ் அமைப்பு இப்பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஈழவர் என்று பகர்ந்ததோடு, அவர்கள் வாழும் பிரதேசம் அவர்களின் உடைமைப்பாடு என்றும்,அதனை உடைமையாக்கிட போராடுவதாகவும் அறிவித்தது.ஈழவிடுதலையானது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையாக வென்றெடுக்கப்பட வேண்டும் என்றும், ஈழப்போராட்டத்தின் முதன்மை அணி மலையகம் வாழ் தமிழ்பேசும் தொழிலாளர்களே என்றும் ஈரோஸ் அமைப்பு அறிவித்தது. <ref>{{cite news|url=http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf|title=ஈழவர் இடர்தீர - ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூல்|accessdate=066 January 2016 }}</ref>.
 
1980 களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஈரோசின் [[மாணவர் இளைஞர் பொதுமன்றம்|இளைஞர் அமைப்பைச்]] சேர்ந்த பலர் வெளியேறி பத்மநாபா தலைமையில் ஈழபுரட்சிகர விடுதலை இயக்கத்தை அமைத்தனர்.பத்மநாபாவுடன் பிரிந்து சென்றவர்களில் டக்ளஸ் தேவாநந்தா, சுரேஸ்பிரமேந்திரன்,வரதராஜ பெருமாள் ஆகியோரும் அடங்கியிருந்தனர். இதே காலப்பகுதியில் ஈரோசின் தாபக உறுப்பினர்களில் ஒருவரான அருளரும் கருத்து முரண்பாடு காரணமாக அமைப்பிலிருந்து விலகினார்.
 
மலையகத்தில் அரசியல் பணிகளை மேற்கொண்ட ஈரோஸ் அமைப்பு ஹட்டன் மல்லிகைப்பு சந்தியில் அலுவலகம் ஒன்றையும் திறந்திருந்தது. 1984 ஆம் ஆண்டு மலையக மக்களின் வரலாறை எடுத்துரைக்கும் “இருபத்தோறாம் நூற்றாண்டின் நவீனஅடிமைத்தனம்” எனும் நூலை,அமைப்பின் ஆய்வு பிரிவான ஈழ ஆய்வு நிறுவனம் வெளியிட்டது<ref>{{cite news|url=http://noolaham.net/project/142/14116/14116.pdf|title=இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்|accessdate=066 January 2016}}</ref> .
 
மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட நவம்பர் 15 ஐ நாடற்றவர் நாளாக ஈரோஸ் அனுஸ்டித்தது.1885 ஆம் ஆண்டு இது தொடர்பான சுவரொட்டி ஒன்று இந்தியாவிலும், மலையகத்திலும், யாழ்ப்பாணத்திலும் ஈரோஸ் அமைப்பினால் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதினால் மலையகத்தில் 60 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்<ref>{{cite news|first=“ஈரோஸ் சுவரொட்டி தாக்கம்”|url=http://noolaham.net/project/71/7048/7048.pdf|title=மக்கள் மறுவாழ்வு 1985 டிசம்பர் - மார்கழி வெளியீடு மலர் 4 இதழ் 3 |accessdate=066 January 2016 | pages=2}}</ref>.
 
1985 ஆம் ஆண்டு ஈரோஸ் உறுப்பினர்கள் இந்தியாவில் ஆயுதபயிற்சிகளை பெற்றனர்<ref name='bbc-11/26/02'>{{cite news | first= T. Sabaratnam | title= Pirapaharan, Chapter 31 - First Military Operation | publisher= தமிழ்சங்கம் இணையம் | url =http://www.sangam.org/articles/view2/?uid=819 | accessdate = 2016-01-07 }}</ref>. இவ்வாறு பயிற்சி பெற்ற அணியை கொண்டு சிறிலங்கா அரசின் மீதும் அரச காவல் படை மீதும் பல கொாில்லா தாக்குதல்களை நடத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_புரட்சி_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது