இரகுநாத கிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
சிNo edit summary
வரிசை 2:
''' ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி.''' (1671&ndash;1710) என்பவர் இராமநாதபுரத்தின் அரசனாவார்<ref name="Lists of Inscriptions, and Sketch of the Dynasties of Southern India">Lists of Inscriptions, and Sketch of the Dynasties of Southern India By Robert Sewell, Archaeological Survey of Southern India</ref> இவர் 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார். இராமநாதபுர சிற்றரசை வளர்த்து ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றினார். அவர் ருஷ்டம் கானின் கொடுங்கோலிலிருந்து மதுரை நாயக்கரை காப்பாற்றினார், மேலும் தஞ்சாவூர் மன்னருக்கு எதிராக தொடர் போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.
 
[[மதுரை]] [[சொக்கநாத நாயக்கர்|சொக்கநாத நாயக்குருக்கு]] இவர் உதவியாக இருந்ததால் இவருக்கு '''''பர இராஜகேசரி''''' அதாவது '''அயல் நாட்டு அரசர்களுக்கு சிங்கம்''' என்ற அவர் பட்டத்தை வழங்கினார். மதுரை ஆட்சிகுட்பட்ட அறந்தாங்கி, பிறான்மலை, திருமயம் போன்ற பகுதிகளை தன் நாட்டுடன் இணைத்தார். இவர் கிறித்துவ மிஷினரிகளின் நடவடிக்கைகளை எதித்தார். மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிருஷ்ண சேதுபதி மறவ நாட்டை விடுவித்தார். இராணி மங்கம்மாளின் படைகளைத் தோற்கடித்தப் பின்னர், இவர் 1707 ஆம் ஆண்டு தன்னாட்சி கொண்டதாக மறவ நாட்டை அறிவித்தார். இவர் தனது தலைநகரை புகலூர் நகரத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். கிழவன் சேதுபதி '''நல்கோட்டால் பாளையம்''' என்ற (பின்னர் [[சிவகங்கை]] ) புதிய பாளையத்தை நிறுவியதோடு உதய தேவரை அதன் ஆளுநராக நியமித்தார். இவர் திருவாடானை, காளையார் கோவில் ஆகிய கோயில்களுக்கு கிராமங்களை தானமாக வழங்கினார். இது '''''[[செப்பேடுகள்]]''''' மூலம் அறியப்படுகிறது. தலை நகரான இராமநாதபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினார், வைகை ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டினார்.
==இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கை ==
இவர் கள்ளர் குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார், பின்னர் தன் மனைவியின் சகோதரரை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் தொண்டைமான் பல்லவராய தொண்டைமானுக்கு பதிலாக மாற்றினார், பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.
"https://ta.wikipedia.org/wiki/இரகுநாத_கிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது