இக்கோவிலில் மூன்று தெய்வங்களான ஆக்கல், காத்தல், அழித்தல் கடவுள்களான காளீஸ்வர்ர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் ஆகிய மூவரும் ஒருங்கே அமைந்துள்ளன. அதைப்போலவே அன்னை பார்வதி தேவியும், சொர்ணாம்பிகை, சௌந்தி நாயகி, மீனாட்சி ஆகிய மூன்று தெய்வங்களாக ஒருங்கே அமைந்துள்ளனர். மேலும் வெளி மண்டபத்தில் மூன்று ஆண் தெய்வங்களும் மூன்று பெண் தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளனர்.
None
==வரலாறு==
சங்க காலத்தில் காளையார்கோவில் வேங்கை மார்பன் என்ற அரசரால் ஆளப்பட்டது. பிறகு மன்னர் முத்து வடுக நாதராலும், மருது சகோதரர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. கி.பி.1772 ஜூன் 25-ல் முத்துவடுக நாத தேவரும், மருதுசகோதரர்களும் ஆங்கிலேயர்களான ஜோசப் ஸ்மித் மற்றம் போன்ஜார் இவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்கள் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு சொந்தமான 50000 பகோடாக்கள், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சிறிது காலத்திற்கு கோயில் அடைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்காமல் இருந்தது. வேகோட்டையை சேர்ந்த ஜமீன்தார் எல்.ஏஆர்.ஆர்.எம்.அருணாச்சலச் செட்டியார் தேவகோட்டை ஜமீன்தார் கோவிலில் இருந்து சன்யாஸம் எடுத்துக்கொண்டு காளையார் கோவில் வேதாந்தமடம் சென்றார். தேவகோட்டை செட்டியார் ஸ்ரீசங்கர செட்டியார்,ஸ்ரீஏஎல்.ஆர்.ஆர். இராமசாமி செட்டியார். ஏஎல்.ஆர்.ஆர்.அருணாச்சல செட்டியார் ஆகியோர் சேர்ந்து தேவகோட்டை ஜமீன்தார் அறக்கட்டளையை நிறுவினார்கள்.இந்த அறக்கட்டறையின் மூலம் சொர்ணகாளீஸ்வர்ர் சொர்ணவள்ளி அம்மனின் கோவிலில் நடைபெறும் தினசரி வழிபாட்டுக்குரிய பூசைப்பொருள்களை வழங்குகின்றனர். தற்பொழுது இந்த அறக்கட்டளைவாரிசாக ஏஎல்.ஏஆர்.ஆ. கே.வி.ஆர்.சின்ன வீரப்பன் செயல்பட்டு வருகிறார்.