மலையகத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
'''மலையகத் தமிழர்கள்''' எனப்படுவோர் [[இலங்கை]]யில் [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியரின்]] ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், [[தேயிலை]], [[இறப்பர்]], [[கோப்பி]] முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இருப்பினும் இந்த "மலையகத் தமிழர்" எனும் பதத்திற்குள் தமிழரல்லாத [[தெலுங்கு|தெலுங்கர்]], [[மலையாளம்|மலையாளியினரும்]] அடங்குவர். மலையகப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டு தமிழரே பெரும்பான்மையாக இருப்பதனால் அவர்களுடன் ஒன்றி வாழ்ந்த தெலுங்கரும் மலையாளிகளும் தமிழ் பேசுவோராக மாறிவிட்டனர். ஆங்கிலேயர் இவர்களை ஒரு அடிமை போன்றநிலையில் வைத்திருந்ததனாலும், அதன்பின்னர் தொடரும் ஒடுக்குமுறைகளினாலும் இம்மக்களின் வாழ்வு இலங்கையின் ஏனைய சமுதாயத்தினருடன் ஒப்பிட முடியாத அளவில் பின் தள்ளப்பட்ட வகையிலேயே உள்ளது. இந்த பின்னடைவு, விதிவிலக்காக ஒருசிலரை தவிர, கிட்டத்தட்ட அனைவரும் இந்தியாவில் உள்ள தமது உறவுகளுடனான உறவு துண்டிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் தமக்கு சொந்தமாக இருந்த நிலம் மற்றும் சொத்துக்களும் இழந்தவர்களாகிப் போயினர்.
 
[[இலங்கை]]யின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும், அப்பிரதேசங்கள் சார்ந்து ஏனைய தொழில் நிலைகளில் உள்ளோரும், அவர் தம் வம்சாவழியினரும்வம்சாவளியினரும் "மலையகத் தமிழர்" என்றே அழைக்கப்பட்டப் போதும். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதால் "இந்தியத் தமிழர்" என்றும் "இந்திய வம்சாவளித் தமிழர்" எனும் பகுப்புக்குள்ளும் உள்ளடங்குவர். இலங்கையின் புள்ளிவிபர அறிக்கைகளில், அடையாள அட்டை வழங்கல் முறையில், மற்றும் ஏனைய பதிவுகளில் ''இந்தியத் தமிழர்'' எனக் குறிப்பிடப்படுவதும் நடைமுறையில் உள்ளது என்றபோதும், [[போத்துக்கீசர்|போத்துக்கீசரின்]] வருகைக்கு முன்னர் இருந்தே இந்தியாவில் இருந்து இலங்கையில் வந்து குடியேறிய [[இந்திய வம்சாவளித் தமிழர்கள்]] "மலையகத் தமிழர்" எனும் பகுப்புக்குள் உள்ளடங்கமாட்டார்கள்.{{cn}}
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மலையகத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது