வெ. இறையன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 28:
முனைவர் வெ. இறையன்பு ஒரு வித்தியாசமான இந்திய ஆட்சிப் பணி நிர்வாகியாவார். தொடர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கையாள்வதில் தொன்று தொட்டு இருப்பதிலிருந்து இவர் வேறுபட்டுக் காணப்படுகிறார். உள்ளார்ந்த திறன்களாலும் ஆன்மீக நோக்கு நிலையிலும் நாட்டம் கொண்டவராகவும் இருக்கிறார். இவர் தனது வாழ்வை ஒரு தேடலின் பயணமாக மாற்றிக்கொண்டார். இந்த தேடலானது பல கரைகளை அதாவது இலக்கிய வெளிப்பாடு, பகுத்தறிவைத் தேடுதல் மற்றும் குறிக்கோளுடன் கூடிய பகிர்ந்தளித்தல் ஆகியவற்றைத் தொடுகிறது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். கிராமப்புற ஏழைகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறார். அவரது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, அப்பழுக்கற்ற உறுதியான நேர்மையுடன் காணப்படுகிறார். அவர் நியாயமான நிர்வாகியாக பணியாற்றி அரசாங்க இயந்திரத்தை மேம்படுத்துவதுடன், பயனுள்ள நிர்வாகத்தையும் வழங்கி வருகிறார். சில நேரங்களில், மனுதாரர் வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் அவர்களின் குறைகள் களையப்பட்டதுண்டு. ஊழல் தடுப்பு மற்றும் முறைகேடுகளை ஒழிக்கும் விதமாக செயல்படுகின்றார். இது போன்றவைகளை கட்டமைப்பதில் மிக உறுதியாக இன்றளவும் செயல்பட்டு வருகிறார்.
===துணை ஆட்சியர்,
* நாகப்பட்டினம் மாவட்டத்தின் துணை
* சிலிக்கா மணல் கடத்தல்காரர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் காரைக்காலுக்கு கடத்திச் செல்வது தடுக்கப்பட்டு, அதற்கான உரிமத்தை வழங்கியதன் மூலம் அரசாங்க வருவாயை அதிகப்படுத்தினார். இரவு நேரங்களில் அடிக்கடி ஆய்வு நடத்தி மணல் கடத்தலைத் தடுத்ததின் மூலமும் அரசாங்க வருவாய் அதிகரித்தது.
* நெல்லுக்கான நேரடி கொள்முதல் மையங்களை நிறுவி அதை திறம்பட கண்காணித்தன் மூலம் அருகிலுள்ள மாநிலங்களுக்கு நெல்லின் சட்டவிரோத கடத்தல் தடுக்கப்பட்டது.
|