கட்டபொம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி *திருத்தம்*
வரிசை 22:
| place of burial =
}}
'''வீரபாண்டிய கட்டபொம்மன்''', [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[ஆங்கிலேயர்]] ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் [[ராஜகம்பளம்]] [[நாயக்கர்]] இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையேடுப்புக்குப்பின்புபடையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உறுவாக்கினர்உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர், . பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50ஆண்டுகள்50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர்,. பாண்டிய நாட்டில் கோவிலுகள் இடிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது,,. பாண்டிய நாட்டிலிருந்து உதவிகோரப்பட்டு விஜயநகர பேரரசின் படைகள் வந்த 3நாடுகளும்3 நாடுகளும் மீண்டும் கைப்பற்றப்பட்டன,,. பின்பு பாஞ்சாலங்குறிச்சி ஆண்ட பாண்டிய மன்னன் வீர பாண்டிய கட்ட பெம்மு அவர்களின் முன்னோர்களின் வீரத்தை போற்றி பாஞ்சாலங்குறிச்சியை பரிசாக வழங்கினார்,,,.
 
== கட்டபொம்மன் பெயர் காரணம் ==
வரிசை 30:
 
==வாழ்க்கை==
[[ஜனவரி 3]] [[1760]] அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, [[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். [[பெப்ரவரி 2]], 1790 அன்று 47 வது{{cn}} [[பாளையக்காரன்|பாளையக்காரராகப்]] பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற [[ஊமைத்துரை]], துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் [[வீரசக்கம்மாள்]]. இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
 
==போர்==
வரிசை 44:
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். [[பாஞ்சாலக்குறிச்சி கோட்டை|பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப்]] புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
 
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திருமு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், [[ஜக்கம்மா தேவி]] ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
 
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கட்டபொம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது