சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
முத்திரைகளின் முன்புறத்தில் இருக்கும் மனித, [[விலங்கு]], [[தாவரம்|தாவர]] உருவங்கள் தனித்தனியாகவும், சேர்ந்தும் காணப்படுவதுடன், சிக்கலானவையாகவும், குறியீட்டுத் தன்மையுடன் கூடியனவாகவும் உள்ளன. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுருவங்களிற் பல கலப்புப் பிராணிகளாக உள்ளன. சில விலங்கு இயல்புகளைக் கொண்ட மனித உருவங்களாகவும், மனித முகம் கொண்ட விலங்கு உருவங்களாகவும் இருக்கின்றன. முத்திரைகளில் காணப்படும் விலங்குகளுள், [[ஒற்றைக்கொம்பன்]] உருவமே மிகவும் அதிகமாகக் காணப்படுவது. [[செபு எருது]], [[எருது]], [[புலி]], [[யானை]], [[காண்டாமிருகம்]], [[காட்டுச் செம்மறி]] போன்ற விலங்கு உருவங்களும் உள்ளன.
 
[[File:Shiva Pashupati.jpg|thumb|200px|"[[பசுபதி முத்திரை" என அழைக்கப்படும் முத்திரை]]]]
{{முதன்மை|பசுபதி முத்திரை}}
சில முத்திரைகளிற் காணப்படுகின்ற உருவங்கள் சமயம் சார்ந்த உட்பொருள் கொண்டவையாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் சில முத்திரைகளில் [[யோகி]]யைப் போன்று அமர்ந்த நிலையிலான உருவங்கள் உள்ளன. கொம்புடன் கூடிய இந்த உருவங்கள் அக்காலத்தில் மக்கள் வழிபட்ட கடவுளைக் குறிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஒரு முத்திரையில், நிற்கும் நிலையில் கொம்புடன் கூடிய யோகநிலை உருவமும், அதற்கு முன் ஒரு மனிதன் முழங்காலில் இருந்து பணிவது போலவும் உள்ளது. கீழே வரிசையாக மனித உருவங்கள் காணப்படுகின்றன. இன்னொரு முத்திரையில், இவ்வாறான யோகநிலை உருவமும் அதைச் சூழ அவ்வுருவத்தை நோக்கியவாறு நான்கு விலங்குகளின் உருவங்களும் உள்ளன. இது "பசுபதி" என அழைக்கப்படும் [[இந்து சமயம்|இந்துக்]] கடவுளான [[சிவன்|சிவனின்]] தொடக்கக் கருத்துருவாக இருக்கக்கூடும் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.
 
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது