[[சங்க காலம்|சங்க காலத்தில்]], ( கி.மு 200600-கி.பி 200 ) [[தமிழர்|தமிழர்களின்]] வாழ்க்கையின் முதன்மைப் பகுதியாக வேளாண்மை இருந்தது.<ref name="Venkata Subramanian 26">Venkata Subramanian. p. 26.</ref> இது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாக கருதப்பட்டது, எனவே அனைத்து தொழில்களைவிட இது முதன்மை வகித்தது. உழவர்கள் சமூக நிலையில் மேல் நிலையில் இருந்தனர். அவர்கள் உணவு தானிய உற்பத்தியாளர்களாக இருந்ததால், சுய மரியாதையுடன் வாழ்ந்தனர். சங்க காலத்தின் துவக்கக் கட்டங்களிலேயே வேளாண் தொழில் பழமையானதாக இருந்தது, ஆனால் நீர்ப்பாசனம், உழவு, எருவிடுதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றில் முன்னேற்றத்துடனும் செயல்திறன் கொண்டதாகவும் இருந்தது. பண்டைய தமிழர்கள் பல்வேறு விதமான மண்வகைகள், அவற்றில் பயிரிடப்படும் பயிர் வகைகள் அந்தந்த பகுதிகளுக்கு பொருத்தமான பல்வேறு நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். இவை தற்போது சென்னை, தஞ்சாவூர் பாசண முறைகளாக உள்ளன.