அர்ஜுன் ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''அர்ஜுன் ரெட்டி''' 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிராணே ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது கோப மேலாண்மை சிக்கல்களைக் கொண்ட குடிகார அறுவை சிகிச்சை நிபுணரான அர்ஜுன் ரெட்டி தேஷ்முக்கை (தேவரகொண்டா) பற்றிய கதையாகும். அர்ஜுன் தனது காதலி ப்ரீத்தி ஷெட்டி (பாண்டே) திருமணத்திற்குப் பிறகு தன்னைத் தானே அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறான். இத்திரைப்படம் அர்ஜுனின் வீழ்ச்சி மற்றும் அடுத்தடுத்த எழுச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது.
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதை பிசியோதெரபி மாணவராக இருந்த
நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆனது. முதன்மையாக இத்திரைப்படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணி 20 ஜூன் 2016 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. மொத்த திரைப்படமும் எடுக்க 86 வேலை நாட்கள் ஆனது. ஹைதராபாத் மட்டுமல்லாது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் மங்களூர், டெஹ்ராடூன் மற்றும் புது தில்லியிலும், வெளிநாட்டு படப்பிடிப்பு இத்தாலியிலும் நடைபெற்றது. இத்திரைப்படத்திற்கு ராதன் மற்றும் ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர் முறையே பாடல்கள் மற்றும் பின்னனி இசை அமைத்துள்ளனர். ராஜ் தோட்டா புகைப்படக்கலை இயக்குநராகவும், சஷாங்க் மாலி படத்தின் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இத்திரைப்படம் 40—51.5 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டது. இப்படம் இந்தியாவின் மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவிலிருந்து 'ஏ' (வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம்) சான்றிதழைப் பெற்ற பின்னர் 25 ஆகஸ்ட் 2017 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. வெளியீட்டிற்குப் பிறகு இப்படம் அதன் இயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு மற்றும் நடிகர்களின் நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கங்களை ஊக்குவிப்பதாகவும், காதல் காட்சிகளுக்காகவும் எதிர்மறையான விமர்சனங்களை இத்திரைப்படம் பெற்றது. எதிர்மறையான விமர்சனங்கள் பெற்ற போதும் படம் வசூல் சாதனைப்படைத்தது. உலகளவில் 510 மில்லியன் இந்திய ரூபாயை வசூலித்தது. அதில் விநியோகஸ்தர்களின் பங்கு 260 மில்லியன் இந்திய ரூபாய். படம் 65 வது தென்னக பிலிம்பேர் விருதுகள் விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைகளைப் பெற்றது. இதில் சிறந்த தெலுங்குத் திரைப்படம், சந்தீப் வாங்காவுக்கான சிறந்த தெலுங்கு இயக்குனர் மற்றும் தேவரகொண்டாவுக்கான சிறந்த தெலுங்கு நடிகர் ஆகியவை அடங்கும். இது இந்தியில் கபீர் சிங் (2019) என மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் ஆதித்யா வர்மா என மறு ஆக்கம் செய்யப்படுகிறது.
==நடிகர்கள்==
|