→கியோமோரி
இட்சுகுசிமாத் தீவில் கோயில் ஒன்றைக் கட்டி அங்கே உறையும் கடவுளை வழிபட்டால் சப்பானின் மீது மேலாட்சி கிடைக்கும் எனக் கனவொன்றில் வந்த வயதான குருவானவர் உருதிமொழி கொடுத்ததனால், கியோமோரி கோயிலை மீளக் கட்டியதாகவும் சொல்லப்படுகின்றது. தைராவினால் நிதி வழங்கப்பட்டு இடம்பெற்ற திருத்த வேலைகளினால், இட்சுகுசிமா ஒரு முக்கிய மத நிலையமாக வளர்ச்சியுற்றது.
== மத முக்கியத்துவம் ==
இட்சுகுசிமாக் கோயில் சுசானோ-ஓ நோ மிக்கோட்டோவின் மூன்று மகள்களான இச்சிகிசிமகிமே நோ மிக்கோட்டோ, தகோரிகொமே நோ மிக்கோட்டோ, தசிட்சுகிமே நோ மிக்கோட்டோ ஆகியோருக்கு உரித்தாக்கப்பட்டது. இவர்கள் கடலுக்கும், புயலுக்குமான சின்டோ கடவுள்கள் ஆவர்.
== மேற்கோள்கள் ==
<references/>
[[பகுப்பு: சப்பானிய வழிபாட்டிடங்கள்]]
|