உடனொளிர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு செய்ய வேண்டிய தரவு
வரிசை 4:
 
'''உடனொளிர்தல்''' (Fluorescence) என்பது [[இருள்|இருளில்]] அல்லது [[மின்காந்த அலை]]யதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற, காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய செயல் ஆகும். <ref>[https://www.tamillexicon.com/define/fluorescent கட்டற்ற இணையத் தமிழ் அகரமுதலிப் பக்கம்]</ref> எடுத்துக்காட்டாக, குயினைன் சல்பேற் கரைசல் (Quinine sulphate solution ), சிங் சல்பைட் (ZnS ), சிங் காட்மியம் சல்பைட் (ZnCdS ), பேரியம் ஈய சல்பேற்று (BaPb SO4 ) போன்ற வேதிப்பொருட்கள் தம்மில் விழும் ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஒளியினை ஏற்று, வேறொரு அலைநீளமுள்ள ஒளிக்கதிர்களை வெளிவிடும் நிகழ்வு, உடனொளிர்தல் ஆகும். உடனொளிர்தலைத் தூண்டும் ஒளி நின்றதும் உடனொளிர்தலும் நின்றுவிடும். கதிரியலில் இப்படிப்பட்ட பொருட்கள் வலுவூட்டும் திரைகளில் (Intensifying Screen) பயன்படுகின்றன. இதனால் நோயாளி பெறும் [[கதிர் ஏற்பளவு]] கணிசமாகக் குறைகிறது.
 
உடனொளிர்தலும் பின்னொளிர்தலும் (Fluorescence and Phosphorescence): சில பொருள்களின் மீது ஒளியானது (முக்கியமாகப் புற வூதா ஒளி) விழுகின்றபோது அப்பொருள்கள் தாமே ஒளியை வெளியில் விடத் தொடங்குகின்றன. அப்படி வெளியிடப்படும் ஒளி சாதாரணமாக அந்த ஒளிக்குக் காரணமாகிய தூண்டும் ஒளியின் நிறமல்லாத வேறு நிறம் கொண்டிருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு உடனொளிர் தல் அல்லது பின்னொளிர் தல் என்று பெயர். தூண்டும் ஒளி நின்றவுடனே அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியும் நின்றுபோகுமானால் அது உடனொளிர் தலாகும். தூண்டும் ஒளி நீக்கப்பட்ட பிறகும் சிறிது காலத் திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ ஒளி வெளி யாகுமானால் அது பின்னொளிர் தலாகும்.
• பொலோனாக் கல்' (Bologna Stone)' என்பது பேரியத்தின் சல்பைடு தாதுவாகும். அதிலே பின் னொளிர் தல் உண்டாவதை 1602ஆம் ஆண்டில் முதலில் கண்டுபிடித்தார்கள். மிகுந்த பிரகாசமுள்ள ஒளியிலே இந்தக் கல்லை வைத்திருந்தால் பிறகு அது இருட்டிலே பிரகாசிப்பதைக் கண்டார்கள். இதைக் கண்டுபிடித்த பெருமை பொலோனாவில் வாழ்ந்த செருப்புத் தைப் பவன் ஒருவனைச் சாரும். கடற்பஞ்சு (Sponge), நீரை உறிஞ்சிக் கொள்வது போலப் பின்னொளிரும் பொருள் கள் ஒளியை உட்கவர்ந்து கொண்டு, பிறகு இருட்டில் அந்த ஒளியை வெளிவிடுவதாக முன்பு இதற்கு விளக் கம் கூறப்பட்டது. வெளிவிடும் ஒளியின் நிறமானது உட்கவர்ந்த ஒளியின் நிறத்திலிருந்து வேறுபடுகிறதாத லால் இந்த விளக்கம் சரியன்று.
பாஸ்வரத்தைக் காற்றில் வைத்தால் அது ஆக்சி கரணமடைவதால் ஒளிவிடுகிறது. ஆனால் பின்னொளிர் தலில் அம்மாதிரியான ரசாயன வினையொன்றும் நிகழ்வதில்லை.
கடலில் வாழும் சில உயிர்கள் வெளிவிடும் ஒளியால் அலைகள் கரையிலே பலமாக மோதும்போது உண்டா கும் நுரையிலும் திவலைகளிலும் இரவு நேரங்களில் ஒருவகை ஒளி அழகாகத் தோன்றுகின்றது. அதுவும் பின்னொளிர் தலும் ஒன்றல்ல. இறந்துபோன சில மீன் களும். ஈரமான மரங்கள் முதலியவைகளும் வெளிவிடும் ஒளிக்கு ஒருவகையான ஒளிபொருந்திய பாக்டீரியா காரணமாகும். மின்மினிப் புழுவும் மின்மினிப் பூச்சி யும் ஒளிவிடுகின்றன. தென் அமெரிக்காவில் அருமை யாக ஒருவகை மின்மினிப்புழு காணப்படுகிறது. அதன் தலையில் சிவப்பு ஒளியும் பக்கங்களில் பச்சை ஒளியும் தோன்றுகின்றன. அதனால் அதை 'ரெயில் பாதைப் புழு' என்றும் கூறுவார்கள். இந்த நிகழ்ச்சி களுக்கெல்லாம் பொதுப்படையாக உயிரி ஒளி என்று பெயர். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்னும் முழுவிளக் கம் தெரியவில்லை. ஆனால் உயிரிகளில் ஏற்படும் ஏதோ ஒருவகை உயிர்-ரசாயன மாறுதல்களால் இது ஏற்படு கிறதென்று பொதுவாகக் கருதுகிறார்கள், உடனொளிர் தல் அல்லது பின்னொளிர் தலாகிய பௌதிக நிகழ்ச்சி யில் எவ்வகையான மாறுபாடும் பொருளில் ஏற்படுவ தில்லை .
1833-ல் சர் டேவிட் புரூஸ்ட்ட ர் உடனொளிர் தலை முதன் முதலாக விளக்கமாக விவரித்தார்.
பின்னொளிர் தலில், தூ ண்டும் ஒளி நீக்கப்பட்ட பிறகும் அதனைப் பெற்ற பொருளிலிருந்து ஒளி தொடர்ந்து வெளியாகிறது. உடனொளிர் தலிலும் தூண்டும் ஒளி நீக்கப்பட்ட பிறகும் ஒரு வினாடியின் சிறுபாகத்திற்கு ஒளி வெளியாகிறது. ஆதலால், இந்த வேறுபாட்டை மட்டும் கொண்டு இரண்டையும் வேறுவேறாகக் கருதுவது கடினம்.
பின்னொளிர் தலை ஆராய்வதற்குப் பின்னொளிர் தல் மானி (Phosphoro scope) என்ற எளிய கருவியைப் பெக்குரெல் (Becquerel) உண்டாக்கினார். அதில் ஒரு கரிய பெட்டி இருக்கும். அதற்குள் தொளையுள்ள இரண்டு தட்டுக்களுக்கிடையில் பரிசோதனைக்குரிய பொருள் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு தட்டுக் களிலுமுள்ள தொளகள் நேர் நேராக இராதபடி தட் டுக்கள் வைக்கப்பட்டிருக்கும். தூண்டும் ஒளி ஒரு தொளை வழியாக அப்பொருளின் மீது ஒரு பக்கத்தில் விழும். மறுபக்கத்திலுள்ள தொளைவழியாக அப் பொரு ளைப்பார்ப்பார்கள். அந்தத் தொளைமுதலில் குறிப்பிட்ட தொளைக்கு நேர் எதிர்ப்பக்கத்திலில்லாது தள்ளியிருப்ப தால் அதன் வழியாக அப்பொருளைப் பார்க்கும் போது அப்பொருளின் மேல் விழுந்த ஒளி அதே சமயத்தில் தெரியாமல் சிறிது காலந்தாழ்த்துத் தெரியும். காலம் எவ்வளவு பிந்தும் என்பது அந்தத் தட்டுக்களை சுழம் றும் வேகத்தைப் பொறுத்திருக்கும். இந்த எளிய கருவியைக்கொண்டு பின்னொளிரும் பொருள்கள் எவை என்றும், அவை எவ்வளவு காலம் பின்னொளிர்கின்றன என்றும் கண்டுபிடிக்க முடிந்தது.
பின்னொளிர் வின் தன்மையைக் கொண்டு உட னொளிர்தலுக்கும் பின்னொளிர்தலுக்கும் வேறுபாடு காண்பது இப்பொழுது சரியன்று என்று தெரிவதால், இக்காலத்தில் பின்னொளிர்தல் என்ற சொல்லானது பின்னொளிரிகள் (Phosphors) என்று கூறப்படும் சில படிகப் பொருள்களுக்கு மட்டும் வழங்குகின்றது. இந்தப் பொருள்களில் உலோக அசுத்தங்கள் சிற்றள வில் இருக்கின்றன. அவை அப்பொருள்களின் சட்டக அமைப்பை (Lattice structure) மாறுபடச்செய்து, அவற்றைப் பின்னொளிரும் பொருள்களாகச் செய்
கின்றன.
தூண்டும் கதிர் வீச்சினால் உடனொளிரும் அல்லது பின்னொளிரும் பொருள்களின் மூலக்கூறுகள் சக்தி அதிகரிக்கப் பெறுகின் றனவென்றும், பின்னர்ப் பழைய படி இயல்பான சக்தி நிலையை அடைகின்றன வென் றும், அவ்வாறு அடையும் செயலே ஒளிர்தலுக்குக் காரணமாகிறதென்றும் இக்காலத்தில் இந்நிகழ்ச்சி களுக்கு விளக்கம் கூறுகிறார்கள். இவ்விளக்கம் சரி யானதென்றால் புற ஊதாக்கதிர் வீச்சானது சிறந்த தூண்டு சாதன மாக இருக்கவேண்டும் என்று ஆராய்ந்து அவ்வாறே இருப்பதாக அறிந்திருக்கிறார்கள்.
வெளிவிடும் ஒளியின் அதிர்வெண்ணானது தூண்டும் ஒளியின் அதிர்வெண்ணைவிட எப்பொழுதும் குறை வாகவே இருக்கும் என்று உடனொளிர் தல், பின்
 
னொளிர் தல் பற்றிய ஸ்டோக்ஸ்' விதி (Stokes Law) கூறுகிறது. ஆனால் இந்த விதிப்படி எல்லாச் சமயங் களிலும் நடைபெறுவதில்லை.
வெப்பம் அல்லது அகச் சிவப்புக் கதிர் வீச்சு உட னொளிர் தலையும் பின்னொளிர் தலையும் அழித்துவிடுகிறது.
பல பொருள்கள் நன்கு உடனொளிர்வனவாக இருக் கின்றன. கொயினாக்கரைசலின் மேற்பரப்பு மிகுந்த உடனொளிர்வுள்ளதாக இருக்கிறது. பச்சையம் (Chlorophyll) நல்ல சிவப்பு ஒளிவிடுகின்றது. யுரே னியம் கூட்டுக்களில் பல நன்கு உடனொளிர் வனவாக இருக்கின்றன. ஆனால் இயற்கைத் தாதுப்பொருள் களும், இரத்தினக் கற்களுமே அழகான உட னொளிர்தலுள்ளவை. ஒரு பொருள் நன்றாக உட னொளிர் தலுள்ளதாக இருக்க வேண்டுமானால் அதில் சிறிய அளவில் அசுத்தம் படர்ந்திருக்கவேண்டுமென்று கண்டிருக்கிறார்கள். டாக்டர் சீ.வீ. இராமன் தமது பெங்களூர் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்த்துவைத்துள்ள உடனொளிரும் இரத்தினங்களும் மற்றத் தாதுப் பொருள்களும் மிகப் புகழ் வாய்ந்தவை.
உடனொளிர் தலில் உள்ள வேறுபாடுகளைக் கொண்டு உணவுப்பொருள்கள், மருந்துகள், ரசாயனப்பொருள் கள் முதலியவற்றிலுள்ள கலப்படத்தைக் கண்டு பிடித்து விடலாம். ஆடையில் பருத்தி நூலுக்கும் பட் டிற்கும் உள்ள வேறுபாட்டை அறியலாம்.. ஓர் ஓவியம் முதலில் தீட்டியதேதானா அல்லது போலிப்பிரதியா என்பதையும் கண்டுபிடிக்கலாம். இருட்டிலே எளிதில் காண்பதற்காகப் பல பொருள்களில் ஒளிரும் வர்ணத் தைப் பூசுவதுண்டு. பின்னொளிரும் ரசாயனப் பொரு ளைக் கடிகாரத்தில் மணிகாட்டும் எண்களிலும் முட் களிலும் சேர்த்திருக்கின்றனர். அந்த ரசாயனப் பொருளில் கதிரியக்கமுள்ள உப்பொன்றைச் சிறிதள வில் சேர்த்திருப்பதால் அதிலிருந்து வரம் கதிர்வீச்சுத் தூண்டுதலால் எண்களும் முட்களும் தொடர்ந்து ஒளிர் வனவாக இருக்கின்றன. உடனொளிரும் குழாய் விளக் குக்கள் (Fluorescent tube lights) இக்காலத்தில் பெருகி வருகின்றன. அவைகளில் உள்ள பாதரச ஆவி யின் மூலமாக மின்சாரம் பாய்வதால் அங்குப் புற ஆதாக் கதிர்கள் உண்டாகின்றன. அக்கதிர்கள் குழாய் களின் உட்புறத்தில் தடவப்பட்டுள்ள சில குறிப்பிட்ட ஒளிரிகளில் பட்டு அவற்றை ஒளிவிடச் செய்கின்றன. எக்ஸ் கதிர் உடனொளிர் மானியில் உடனொளிர் திரை களைப் பயன்படுத்தி, உடம்பின் உட்பாகத்தில் உள்ள உறுப்புக்களைக் கண்டு ஆராய்கிறார்கள். அந்த மாதிரித் திரைகள் டெலிவிஷனிலுள்ள நோக்குச் சாளரங்களி ஓம், எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பு முதலியவைகளி ஓம் பயன்படுத்தப்படுகின்றன. புற ஆதா ஒளியைக் கொண்டு எடுக்கும் போட்டோக்களுக்குப் பயன்படும் பிலிம்களில் உடனொளிரும் நிறமிகள் (Pigments) பயன்படுகின்றன. மேலும் விஞ்ஞானத்திலும் தினசரி வாழ்க்கையிலும் உடனொளிர்தலும் பின்னொளிர் தலும் மிகப் பல வழிகளில் பயன் படுகின் றன.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/உடனொளிர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது