அகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அகம் |
|||
வரிசை 1:
உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது. அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்தனி நிலையில் உண்டாவதில்லை; அவை ஆணும் பெண்ணும் என்ற இரண்டின் கூட்டுறவால் நிகழும் வாழ்வியல் முறையாகும். பழந்தமிழர் வாழ்வியலில் '''அகம்''' என்பது, [[ஆண்|ஆணும்]], [[பெண்|பெண்ணும்]]
==சொற்பொருள்==
அகம் என்பது காரணப் பெயர் என்றும், இது போக நுகர்ச்சி ஆதலாலும், அதனால் விளையும் பயனைத் தானே அறிதலாலும் அகம் எனப்பட்டது என்றும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் கூறுகிறார்.<ref>தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, 2006. பக். 3</ref>
==கருத்துரு==
தமிழ் இலக்கணம் சொற்களினால் உணரப்படும் பொருளை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. அவை '''முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்''' என்பன. நிலம், காலம் என்பன தொடர்பானவை முதற்பொருளில் அடங்குகின்றன. இந்த இடத்திலும், காலத்திலும் காணப்படுவன கருப்பொருட்கள் எனப்படுகின்றன. தெய்வம், மக்கள், பறவை, விலங்குகள், ஊர், நீர், பூ, மரம், தொழில், உணவு, கருவிகள் முதலிய [[உயர்திணை]], [[அஃறிணை|அஃறிணைப்]]
==வகைகள்==
மனிதருடைய அகவாழ்க்கையில் பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இந்நிலைகளை நிலப் பிரிவுகளுடனும், காலத்துடனும், இயற்கையுடனும் தொடர்புபடுத்திக் கையாளுகின்றன. இவ்விலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு அகவாழ்வைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், கைக்கிளை, பெருந்திணை என எழுவகையாக உரிப்பொருளை வகுத்து விளக்குகிறது தமிழ் இலக்கணம். ஐந்திணையொழுக்கம் அடிப்படையில் களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என அக வாழ்வினை இரண்டாகப் பிரிப்பர்.
== '''களவு:''' ==
களவானது, தலைவனும் தலையும் பெற்றோர் அறியாமல் தாமே எதிர்ப்பாராமல் சந்தித்துக் கூடுவது. இக்களவு பிறரின் பொருள்களை அவர்கள் அறியாமலேயே கவர்ந்து கொள்ளும் களவு (திருட்டு) போலத் தீயது அன்று. அத்தலைமக்கள் பின்பு மணம் செய்துகொண்டு மனையறம் காக்கும் கடமை உள்ளதால் இவையும் அறமாகவே கருதப்படுகிறது. இக்களவு,
* இயற்கைப் புணர்ச்சி
தலைவனும், தலைவியும் ஊழ்வினை காரணமாக தாமே இயற்கையாக சந்திப்பது.
* இடந்தலைப்பாடு
இயற்கைப் புணர்ச்சிக்கு பின் தலைவன், தலைவியும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் மீண்டும் அவ்விடத்திற்கு சென்று கூடுதல்.
* பாங்கற் (தோழர்) கூட்டம்
முன்பு குறிப்பிட்ட இடத்தில் தலைவி வந்து நின்ற நிலையைக் பாங்கனாலறிந்து (தலைவனின் தோழர்) சென்று கூடுதல்.
* பாங்கற்(தோழியிற்) கூட்டம்
இக்களவொழுக்கம் நீட்டித்து நடத்த விரும்பிய தலைவன், தலைவியின் தோழி இவள் என்பதை அறிந்து, அவள தனித்திருக்கும் நிலையிலும் தலைவியோடு கூடி இருக்கும் நிலையிலும், தன் குறையிரந்து கூறி அத்தோழி வாயிலாகக் கூடுதல்.
என நான்கு வகையால் நடைபெறும்.
== '''கற்பு:''' ==
கற்பானது, தலைவன் தனக்குக் உரியத் காதற் தலைவியின் சுற்றத்தார் கரணத்தோடு (சடங்குகளோடு) மணம் செய்து கொடுப்பதைக் கூறுவதாகும். இவ்வகை மணம்,
* மறைவெளிப்படுதல்
களவொழுக்கம் பூண்டவர் தாமே மணம் செய்து கொள்ளும் முறை. இம்மணத்திற்குப்பின் அவர்களின் மறையொழுக்கம் ஊராருக்குத் தெரியவரும்.
* தமரிற்பெறுதல் (இரு வகைப்படும்)
# களவொழுக்கம் பூண்டவர் அம்பல், அலர் எழ, களவொழுக்கம் வெளிப்பட்டு தமர்கொடுக்க மணந்துள்ளும் முறை.
# அம்பல் அலருக்கு இடமில்லாமல் பெற்றோர் நடத்திவைக்கும் மணமுறை
* உடன்படுதல்
பெற்றோர் இல்லாமல் தம்முள் ஒத்த அன்புடைய தலைவனும், தலைவியும் சடங்குடன் மணம் செய்து கொள்ளுதல் ஒருவகை மணமுறை ஆகும்.
==குறிப்புக்கள்==
|