திருவாரூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: https://tiruvarur.nic.in/about-district/history/
வரிசை 49:
 
== வரலாறு ==
திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பராம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படுகிறது. இப்பெயர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தினைக் குறிப்பதாகும். [[காவிரி]] ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் இம்மாவட்டம், [[நெல் வயல்]] வெளிகளினாலும், உயர்ந்த [[தென்னைமரம்|தென்னைமரங்களினாலும்]], பசுமையான தாவரங்களினாலும் செழிப்புடன் திகழ்கிறது. காவிரி நதி மற்றும் அதன் கிளை நதிகள் இம்மாவட்ட நிலத்தினை வளப்படுத்துகின்றன.
1996 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டகளின் சில பகுதிகளைப் பிரித்து ஏ. டி. பன்னீர்செல்வம் மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டமாக இது உருவாக்கப்பட்டது. 1998 இல் மாவட்டத்தின் பெயரானது திருவாரூர் மாவட்டம் என மாற்றப்பட்டது.
 
7, 8ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவக்குரவர்களான [[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]], [[சுந்தரர்]] ஆகியோர் இயற்றிய [[தேவாரம்|தேவாரத்தில்]] சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பாடல்பெற்ற தலமாக திருவாரூர் அமைந்துள்ளது. மார்கழி ஆதிரை விழா, பங்குனி உத்திரப்பெருநாள், வீதிவிடங்கனுக்கு நீதி செய்த முறை ஆகியவற்றை இப்பாடல்களின் மூலம் அறியலாம். இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதன்பின்னர், [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜசோழன்]] காலத்தில் புனரமைக்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் மற்றும் [[பாண்டியர்]]களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.
 
[[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழர்]] காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக இக்கோயில் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். 13ஆம் நூற்றாண்டில், [[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திரசோழர்]] காலத்தில், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாண்டியர்கள் மற்றும் ஹோய்சாலர்கள் ஆதிக்கத்தில் இம்மாவட்டம் இருந்துள்ளது. [[நாயக்கர் அரச மரபு|நாயக்கர்கள்,]] [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர அரசு]]கள், [[மராட்டியப் பேரரசு|மராத்தியர்கள்]] காலத்திலும் தொடர்ந்த அரசின் ஆதரவு காரணமாக இம்மாவட்டம் கலாச்சார மையமாக திகழ்ந்துள்ளது. மராத்தியரின் ஆட்சிக்காலத்தில் [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம்]] நடராஜரின் தற்காலிக வீடாகவே திருவாரூர் இருந்துள்ளது. 1759இல் ல்ல்லியின் கீழ் செயல்பட்ட [[பிரெஞ்சு மக்கள்|பிரெஞச்சு]]படைகள் திருவாரூர் [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜ சுவாமி கோயிலில்]] மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை தேடி சூறையாடினர். அப்போது கோயிலைச் சேர்ந்த 5 அந்தணர்கள், ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்க்கிறார்கள் என சந்தேகிகப்பட்டு கொல்லப்பட்டனர்.
 
சுதந்திரத்திற்குப் பிறகு திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக 1991 வரையிலும், பின்னர் 1997க்குப் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது. [[திருவிழிமிழலை ஊராட்சி|திருவிழிமிழலை]], [[திருப்பாம்புரம்]], [[திருமீயச்சூர்]], [[திருவாஞ்சியம் ஊராட்சி|திருவாஞ்சியம்]], தில்லைவிளாகம், திருக்கண்ணமங்கை போன்ற வரலாற்றில் பிரபலமான கோவில்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் பழமையும், புகழும் மிக்க தர்கா அமைந்துள்ளது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள்.<ref>https://tiruvarur.nic.in/about-district/history/</ref>
 
== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது