காரைக்கால் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: <ref>https://tamil.oneindia.com/news/2005/05/28/karaikal.html</ref>
வரிசை 1:
புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி) ஒன்றியப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களான (1) [[புதுச்சேரி]] (2) [[காரைக்கால்]] (3)[[மாஹே]] (4) [[ஏனாம்]] ஆகிய நான்கு பகுதிகளில் பரப்பிலும் மக்கள் தொகையிலும் காரைக்கால் மாவட்டம் இரண்டாவது இடத்தில் அமைகிறது. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம்மாவட்டம் 161 ச.கிமீ பரப்பளவு உடையது. காரைக்கால் மாவட்டமானது [[காரைக்கால்]], [[திருமலைராஜன்பட்டினம்]], [[திருநள்ளாறு]], [[அம்பகரத்தூர்]],[[நெடுங்காடு]], [[கோட்டுச்சேரி]], [[நிரவி]] ஆகிய ஊர்களை உள்ளடக்கியது. 2005 ஆம் ஆண்டு ரங்கசாமி முதல்வாராக இருந்த போது, அதற்கு முதல்கட்டமாக காரைக்காலை தனி வருவாய் மாவட்டமாகும் என புதுவை அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்துதற்போது காரைக்கால் நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக டாக்டர்சுந்தரவடிவேலு பொறுப்பேற்றார். அவர் ஏற்கனவே, காரைக்கால் பகுதியின் நிர்வாகியாகப்பொறுப்பில் இருந்தார்.<ref>https://tamil.oneindia.com/news/2005/05/28/karaikal.html</ref> காரைக்கால் நகரம் 1739 ஆம் ஆண்டுக்கு முண்பு தஞ்சை அதாவது இன்றைய தஞ்சாவூர் (Tanjore ) மன்னரான ராஜா பிரதாப் சிங்க் கட்டுப்பாட்டில் இருந்தது பிறகு சில ஆண்டுகள் [[பிரெஞ்சு]]காரர்களிடமும் சில ஆண்டுகள் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ்]]காரர்களிடமும் மாற்றம் அடைந்துக்கொன்டே இருந்தது .இறுதியில் ஒரு உடன்படிக்கையில் 1816 /1817 ஆண்டுகளில் பிரஞ்சு காரர்களிடம் ஒப்படைக்கபட்டது.1954 நவம்பர் ஒன்றாம் (1st November 1954) தேதி வரை காரைக்கால் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலேயே இருந்ததெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது காவிரி கழிமுகத்தில் அமைந்துள்ளது.[[அரசலாறு]], [[உப்பனாறு]], [[முல்லையாறு]], [[திருமலைராயன் ஆறு]] ஆகிய ஆறுகள் காரைக்கால் மாவட்டத்தில் ஓடுகின்றன. மேற்கு எல்லையாக [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டமும்]], வட தென் எல்லையாக [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டமும்]] கிழக்கு எல்லையாக [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவும்]] உள்ளது. இதை நாகப்பட்டிண மாவட்டத்துக்கு இடையில் உள்ள பகுதி என்று சொல்வதும் பொருந்தும். [[திருநள்ளாறு]] என்ற இந்துக்களின் புகழ் பெற்ற ஊர் இங்கு உள்ளது. காரைக்கால் நகரில் புகழ் பெற்ற [[காரைக்கால் அம்மையார் கோயில்]] உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது