திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 72:
 
இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசு விற்கு நீதி வழங்கினார்.
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]
 
== பெயர் காரணம் ==
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]
 
திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
 
வரி 83 ⟶ 84:
== வரலாறு ==
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் ([[உறையூர்|உறையூர்]], பழையாறை, [[தஞ்சாவூர்|தஞ்சாவூர்]], [[கங்கை_கொண்ட_சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]]) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{{{coord|10.773|N|79.637|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 [[மீட்டர்]] (9.8 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
வரி 110 ⟶ 114:
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||பூண்டி கே. கலைவாணன்
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு
|}
திருவாரூர் நகராட்சியானது [[திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
வரி 119 ⟶ 123:
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.
 
== போக்குவரத்து ==
=== சாலை போக்குவரத்து ===
திருவாரூர் நகரமானது மூன்று தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45எ - [[விழுப்புரம்]], தேசிய நெடுஞ்சாலை 67 - [[கோயம்புத்தூர்]]. திருவாரூர் நகரம் [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை 23 [[மயிலாடுதுறை]] முதல் [[திருத்துரைப்பூண்டி]] வரை, மாநில நெடுஞ்சாலை 67, [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] - [[கோடியக்கரை]] வரை, மாநில நெடுஞ்சாலை 65 [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] - [[கும்பகோணம்]] வரை, மாநில நெடுஞ்சாலை 66 [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இருந்து [[அதிராம்பட்டினம்]] வரை, மாநில நெடுஞ்சாலை 67 [[நாகூர்|நாகூரிலிருந்து]] - [[நாச்சியார்கோயில்]] வரை, மாநில நெடுஞ்சாலை 146 [[மன்னார்குடி]]யிலிருந்து - [[சேதுபாவாசத்திரம்]] வரை, மாநில நெடுஞ்சாலை 147 [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரை, மாநில நெடுஞ்சாலை 151 [[கீழ்வேளூர்]] முதல் கஞ்சானம் வரை ஆகிய மாநில நெடுஞ்சாலைகள், இந்நகரின் வழியே செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், திருவாரூர் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. பெங்களூர், திருவனந்தபுரம், சென்னை போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 
=== தொடருந்து போக்குவரத்து ===
இங்கு இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இரயில் நிலையமானது மேற்கில் [[தஞ்சாவூர்]], வடக்கில் [[மயிலாடுதுறை]], கிழக்கில் [[நாகப்பட்டினம்]] மற்றும் தெற்கில் [[திருத்துரைப்பூண்டி]] ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை]], [[காரைக்கால்]], [[மன்னார்குடி]] மற்றும் [[திருத்துரைப்பூண்டி]] ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை]]யிலிருந்து, [[எர்ணாக்குளம்]] வரை [[மயிலாடுதுறை]] வழியாக தினமும் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. [[மன்னார்குடி]]யிலிருந்து [[திருப்பதி]] வரை மற்றும் [[வேளாங்கண்ணி]]யிலிருந்து [[கோவா]] வரை இரண்டு ரயில்கள் உள்ளன. இது வாரத்தில் மூன்று நாள் [[திருவாரூர்]] வழியாக, இந்த இரயில்கள் இயக்கப்படுகிறது.
 
=== வானூர்தி நிலையம் ===
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 116 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.
 
== புகழ்பெற்றவர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது