பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
நிறுவனத்தின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் (''indigo''), [[பொட்டாசியம்]] நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். [[மலாக்கா நீரிணை]]ப் பகுதிகளில் வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல் [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] உலோகத்துக்காகத் [[தேயிலை]]யை வாங்குவதற்காகச் [[சீனா]]விலுள்ள [[குவாங்சௌ|காண்டனில்]] புறக்காவல்நிலை ஒன்றையும் நிறுவனம் நிறுவியது.
 
1670 ஆம் ஆண்டளவில், [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாவது சார்ள்ஸ்]] மன்னர் நிறுவனத்துக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும் [[நாணயம்|நாணங்களைநாணயங்களை]] வெளியிடவும், [[கோட்டை]]கள், படைகள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், [[சமாதானம்]] ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில் குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும் பிற வல்லரசுகளாலும் பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த நிறுவனம் தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 1680ல் பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளை நிறுவனம் உருவாக்கியது. 1689 ஆம் ஆண்டளவில் வலிமை மிக்க படைபலத்துடன் வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச் சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி]] 1857 முதல் நிலைப்படுத்தப்பட்டது.
 
=== முழுமையான தனியுரிமைக்கான பாதை ===