'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (அஇஅதிமுகஅஉஅதிமுக அல்லது அனைத்திந்தியஅனைத்து உலக அண்ணா திமுக) என்பது [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது [[தமிழகம்]] மற்றும் [[புதுச்சேரி]]யில் முக்கிய அரசியல் கட்சியாகவும் [[இந்திய நாடாளுமன்றம்|இந்தியப் பாராளுமன்றத்தில்]] மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவிலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.