மேலவளவு படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 1:
'''மேலவளவு படுகொலைகள்''' , என்பது [[மேலவளவு ஊராட்சி|மேலவளவு ஊராட்சித்]] தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.<ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/13/1997-tamil-nadu-dalits-murder-a-long-way-for-justice-a-short-way-for-release-2060975.html|title=1997 Tamil Nadu Dalits murder: A long way for justice, a short way for release|work=The New Indian Express}}</ref>
 
== பிண்ணனி ==
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ளமேலவளவு ஊராட்சி 1996 ல் தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தலித்துகள் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என சாதி இந்துக்களால் மிரட்டப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து 9.10.1996 மற்றும் 28.12.96 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு 31.12.96 அன்றுதேர்தல் நடைபெற்றது. இதில் முருகேசன் வெற்றி பெற்றார். மேலும் தனக்கும் , தான் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கைவைத்து வந்தார்.இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பும்போது படுகொலை செய்யப்பட்டனர்.
 
== கொலைசெயப்பட்டவர்கள் விபரம் ==
ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் தலை துண்டிக்கப்பட்டு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசி எறியப்பட்டது.<ref>{{cite web|url=https://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=5344:melavalavu-murders&catid=122&Itemid=138|title=Melavalavu Murders|first=|last=kuffir|work=Round Table India}}</ref>
 
== வழக்கு ==
இவ்வழக்கு கிரிமினல் வழக்காக விசாரிக்கப்படதே தவிர வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை.வழக்கின் தீர்ப்பு 26 ஜூலை , 2001 அன்று கொடுக்கப்பட்டது.
<ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=HfNRO-LtsN4C&pg=PA16&lpg=PA16&dq=melavalavu+massacre+explained&source=bl&ots=_zhoizZfaQ&sig=ACfU3U1cExuCsbDatKqQwjThWOxLXs-WUQ&hl=en&sa=X&ved=2ahUKEwj6zIjR2fjlAhVOi3AKHeaMDcIQ6AEwEXoECEYQAQ#v=onepage&q&f=false|title=Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers|first=|last=Thirumaavalavan|date=20 November 2019|publisher=Popular Prakashan|via=Google Books}}</ref>
அதன்படி வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
== விடுதலை ==
இவ்வழக்கில் அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக திமுக ஆட்சிகாலத்தில் 2008இல் முன்விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542434|title=சாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் ?: மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி|work=www.dinakaran.com}}</ref>மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் அதிமுக ஆட்சிகாலத்தில் 2019இல் விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=https://minnambalam.com/k/2019/11/18/31/melavalavu-massacre-case-13-lifetime-prisoners-release-high-court-qustion|title=மேலவளவு படுகொலை வழக்கு-விடுதலை: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!|work=மின்னம்பலம்}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மேலவளவு_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது