ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selva15469 பக்கம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: official name |
No edit summary |
||
வரிசை 13:
}}
'''ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்''' (சுருக்கமாக '''ஆர்சிபி''' என்று அழைக்கப்படுகிறது) என்பது [[கருநாடகம்|கர்நாடகாவின்]] [[பெங்களூர்]] நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். 2008ஆம் ஆண்டில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இந்த அணியின் பெயர் அந்நிறுவனத்தின் பிரபல மதுபான வகையான ''ராயல் சேலஞ்ச்'' என்பதை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டது. இதன் உள்ளக அரங்கமாக [[எம். சின்னசுவாமி அரங்கம்]] இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை எந்தவொரு [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] தொடரிலும் வென்றதில்லை. எனினும் மூன்று தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
== கிளையணியின் வரலாறு ==▼
செப்டம்பர் 2007 இல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அது 2008ஆம் ஆண்டில் தொடங்கப்படுவதாக அறிவித்தது, இந்தத் தொடருக்காக பெங்களூர் உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் 20 பிப்ரவரி 2008 அன்று மும்பையில் ஏலம் விடப்பட்டன. பெங்களூர் அணியின் உரிமையை விஜய் மல்லையா வாங்கினார், அதற்காக அவர் 111.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தினார். இது மும்பை அணிக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செலுத்திய 111.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அடுத்தபடியாக ஒரு அணியின் இரண்டாவது அதிகபட்ச ஏல விலையாக இருந்தது.
== அணி வரலாறு ==
=== 2008-2010 ===
2008 வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, பெங்களூர் உரிமைக்குழுவின் அடையாள வீரராக [[ராகுல் திராவிட்|ராகுல் டிராவிட்டை]] ஐபிஎல் அறிவித்தது. இதனால் அந்த அணியால் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரை விட டிராவிட்டுக்கு 15% அதிக விலை வழங்கப்பட்டது. இந்த ஏலத்தில் [[ஜாக் கலிஸ்|ஜாக் காலிஸ்]], [[அனில் கும்ப்ளே]], [[ஜாகிர் கான்]], [[மார்க் பவுச்சர்]], [[டேல் ஸ்டெய்ன்]] மற்றும் [[கேமரன் வைட்]] போன்ற பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு வீரர்களை உரிமைக்குழு வாங்கியது. இரண்டாவது சுற்று ஏலத்தில் [[ராஸ் டைலர்]], [[மிஸ்பா-உல்-ஹக்]] மற்றும் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவர் [[விராட் கோலி]] ஆகியோரையும் அவர்கள் ஒப்பந்தம் செய்தனர். இந்த அணி தொடக்கப் பருவத்தின் 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றது, இதனால் எட்டு அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. அணியில் டிராவிட் மட்டுமே அத்தொடரில் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தார், மேலும் மோசமான நிலை காரணமாக அவர்கள் அதிக விலைக்கு வாங்கிய வெளிநாட்டு வீரர் காலிஸை ஒருசில போட்டிகளுக்கு வெளியில் அமர வைக்க வேண்டியிருந்தது. தொடரின் நடுப்பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகளால் தலைமை நிர்வாக அதிகாரி சாரு சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவருக்கு பதிலாக பிரிஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார். அணி உரிமையாளர் [[விஜய் மல்லையா]], ஏலத்தில் வீரர்களைத் தேர்ந்தெடுத்த டிராவிட் மற்றும் சர்மா ஆகியோரை பகிரங்கமாக விமர்சித்தார், மேலும் "அணியின் தேர்வில் இருந்து விலகியிருந்ததே தனது மிகப்பெரிய தவறு" என்று கூறினார். அதைத்தொடர்ந்து தலைமை துடுப்பாட்ட அதிகாரி மார்ட்டின் குரோவ் பதவி விலகினார்.
இந்த உரிமைக்குழு 2009 வீரர்கள் ஏலத்தில் [[கெவின் பீட்டர்சன்|கெவின் பீட்டர்சனை]] 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. அதே விலையில் அவரது சக ஆங்கிலேயரான ஆண்ட்ரூ பிளின்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமானார். இதனால் அந்த இருவரும் ஏலத்தின் விலையுயர்ந்த வீரர்களாக இருந்தனர். பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் உடன் ராபின் உத்தப்பாவுக்காக ஜாகிர் கானை வர்த்தகம் செய்ததோடு, உள்ளூர் மட்டையாளரான மணீஷ் பாண்டேவையும் அணியில் கொண்டுவந்தனர். அந்த ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட போட்டித் தொடருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவராக பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். 2009 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பெங்களூர் அணி தொடர்ந்து போராடியது, புதிய தலைவரின் கீழ் முதல் ஆறு ஆட்டங்களில் இரண்டை மட்டுமே வென்றது. இருப்பினும், பீட்டர்சன் தனது நாட்டு அணிக்காக கடமையாற்றச் சென்றதால் தலைவர் பொறுப்பை கும்ப்ளே ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு அணியின் நிலை மேம்பட்டது, மீதமிருந்த எட்டு குழுநிலைப் போட்டிகளில் ஆறில் வென்று புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. பிறகு சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு அரையிறுதிக்குத் அணி தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த பெங்களூர் எதிரணியை 146 ஓட்டங்களுக்கள் கட்டுப்படுத்தியதுடன், மொத்தம் 5 இழப்புகளுக்கு முறையே 48 மற்றும் 44 ஓட்டங்கள் எடுத்த பாண்டே மற்றும் திராவிட் ஆகிய வீரர்களால் இலக்கை எட்டி வென்றது. பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், கும்ப்ளே 16 ரன்களுக்கு 4 மட்டையாளர்களை வீழ்த்தியதால் ராயல் சேலஞ்சர்ஸ் பந்து வீச்சாளர்கள் சார்ஜர்ஸ் அணியை 143/6 என்ற நிலைக்கு கட்டுப்படுத்தினர். இருப்பினும், அவர்கள் இலக்குத் துரத்துதலில் போராடினர். அணியில் நான்கு மட்டையாளர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தனர், மேலும் பதற்றமான ஆட்டத்தின் முடிவில் ஆறு ரன்களால் தோல்வியுற்றனர்.
2010 ஆம் ஆண்டில், கும்ப்ளேவின் தலைமையில் தொடர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14 போட்டிகளில் இருந்து 14 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றது. இதனுடன் மற்ற 3 அணிகளும் அதே 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இதனால் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை விட அதிகளவு நிகர ஓட்ட விகிதம் பெற்றிருந்த சேலஞ்சர்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதில் பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 35 ஓட்டங்களால் தோல்வியுற்றது. பிறகு மூன்றாம் இடத்துக்கான தகுதிச்சுற்றில் டெல்லி அணியை 9 இழப்புகளால் வீழ்த்தியதன் மூலம் 2010 சாம்பியன்ஸ் லீக் இ20 தொடருக்கு தகுதிபெற்றது. அந்தத் தொடருடன் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே ஓய்வு பெற்றார்.
=== 2011-2017 ===
ஜனவரி 8, 2011 அன்று, ஐபிஎல் நிர்வாக அவை, தொடரின் 4 வது பருவத்திற்கான ஏலத்தை நடத்தியது. உரிமையாளர்களுக்கு அதிகபட்சம் நான்கு வீரர்களை 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் தங்கள் வீரர்களில் ஒருவரான விராட் கோலியை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. இதனால் மீதமிருந்த வீரர்களை மீண்டும் ஏலத்தில் விடப்பட்டனர். மற்ற ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் ஒவ்வொரு அணியிலிருந்தும் செயல்படாதவர்களை விடுவித்த நிலையில், முந்தைய பருவத்தில் இருந்த சிறந்த வீரர்களை ஆர்சிபி விடுவித்தது. ஏலத்தின் முதல் நாளில், பெங்களூர் இலங்கை திலகரத்ன தில்ஷனை 650,000 டாலருக்கும், அதன் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னணி வீரராக இருந்த ஜாகீர் கானை 900,000 டாலருக்கும், நெதர்லாந்தின் ரியான் டென் டோஷேட்டை 400,000 டாலருக்கும், நடுவரிசை மட்டையாளர் ஏபி டிவில்லியர்ஸை 1.1 மில்லியன் டாலருக்கும், முன்னாள் நியூசிலாந்து அணித்தலைவர் டேனியல் வெட்டோரியை 550,000 டாலருக்கும் முந்தைய பருவத்தில் மும்பை அணிக்காக விளையாடிய இந்திய வீரர் சவுரப் திவாரியை 1.6 மில்லியன் என்ற பெருந்தொகைக்கும் ஆஸ்திரேலியாவின் டிர்க் நானெஸ் 650,000 டாலருக்கும், இந்தியாவின் இளம் திறமையாளர் செதேஸ்வர் புஜாராவை 700,000 டாலருக்கும் ஏலத்தில் எடுத்தனர். போட்டியின் நடுவில் காயமடைந்த டிர்க் நானெஸுக்கு மாற்றாக மேற்கிந்திய மட்டையாளர் கிறிஸ் கெய்ல் அணிக்கு அழைத்து வரப்பட்டார். ஐ.பி.எல்.லின் நான்காவது பருவத்தில் அணியை வெட்டோரி வழிநடத்தினார்.
புதிதாக அமைக்கப்பட்ட அணியான கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவை எதிர்த்து ஆறு இழப்புகளால் வென்றது ஆர்.சி.பி. ஆனால் பின்னர் அவர்கள் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியோருக்கு எதிராக மூன்று பெரிய தோல்விகளை சந்தித்தனர். இந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் டிர்க் நானெஸ் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார், அவருக்கு பதிலாக ஆர்.சி.பி அணி நிர்வாகம் மேற்கிந்திய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை அணியில் சேர்த்தது. கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஒரு நூறுடன் (55 பந்துகளில் 102 *) போட்டியைத் தொடங்கினார், இது சேலஞ்சர்ஸ் அணிக்கு 9 இழப்பு வெற்றியை பெற்றுத்தந்தது. அது அடுத்த இரண்டு போட்டிகளிலும் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளை வீழ்த்தியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு எதிராக 85 ஓட்டங்களால் வென்றது. அந்தப் போட்டியில் கெய்ல் தனது தொடரின் இரண்டாவது நூறைப் பதவு செய்தார். பிறகு கொச்சி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் 9 இழப்புகளால் வெற்றி பெற்றனர். பெங்களூரில் நடந்த மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் கொல்கத்தாவையும் தோற்கடித்தனர். ஆனால் பின்னர், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் அணித்தலைவர் ஆடம் கில்கிறிஸ்ட் பெற்ற நூறு காரணமாக 111 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தங்களது கடைசி குழுநிலைப் போட்டியில், சேலஞ்சர்ஸ் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை 8 இழப்புகளால் வீழ்த்தி புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பிடித்தது. கிறிஸ் கெய்ல் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார்.
மும்பையில் நடந்த முதல் தகுதிச் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. விராட் கோலி 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் எடுத்தார், ஆர்சிபி தங்களது 20 நிறைவுகளில் 175/4 ரன்கள் எடுத்தது. தொடக்க மட்டையாளர்களை இழந்த போதிலும், சென்னை 6 இழப்புகளால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது, சென்னையில் நடந்த 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸை ஆர்.சி.பி. எதிர்கொண்டது. முதலில்மட்டையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் மெதுவான செபாக் வீசுகளத்தில் 20 நிறைவுகளில் 185/4 என்ற பெரும் மதிப்பெண்ணை எடுத்தது. கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவர்களுக்கு மீண்டும் ஒரு அடையாளமாக இருந்தார். வெற்றிக்காக போராடிய மும்பை அணி 43 ஓட்டங்களால் வீழ்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது மற்றும் இறுதிப் போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் சென்னையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சூப்பர் கிங்ஸ் 205/5 என்ற மொத்த எண்ணிக்கையை பதிவு செய்தது. சேலஞ்சர்ஸ் சரியாக பேட் செய்யாததால் ஆட்டத்தை 58 ஓட்டங்களால் தோல்வியுற்றது. கிறிஸ் கெய்ல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெங்களூரு 7 போட்டிகளில் வென்றதன் மூலம் அடுத்தடுத்து அதிக வெற்றிகள் பெற்ற புதிய ஐபிஎல் சாதனையை படைத்தது.
== பெயர்க் காரணம் ==
|