ஆலப்புழா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சுற்றுலா: https://alappuzha.nic.in/
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 34:
[[File:Sunrise Beauty of Nature.jpg|thumb|250px|அரூர் (கேரளம்)பாலத்திலிருந்து ஓர் அழகான சூரிய உதயம்]]
 
ஆலப்புழா என்ற பெயர் '' ஆல் '' என்றால் [[கடல்]], '' புழா '' என்றால் [[ஆறு]]; வாய் என்பது பொருளாகும். ஒரு நதியும் கடலும் சேரும் இடம் என்றே, [[மலையாளம் ]] / [[சங்க காலம் | தமிழ்]] மொழியில், இவ்வாறு முழுப் பொருள் ஆகிறது. ஆலப்புழா மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலா இடகளில் ஒன்றாகும். உள்நாட்டு கால்வாய்களின் பெரிய வலையமைப்பைக் கொண்டுள்ளது, இது "கிழக்கின் வெனிஸ்" என்ற பெயரைப் பெறுகிறது. கால்வாய்களின் இந்த பெரிய வலையமைப்புகள் ஆலப்புழாவின் உயிர்நாடி யாகும். [[மலபார் கடற்கரை | மலபார் கடற்கரை]] வழியாக நன்கு அறியப்பட்ட துறைமுகங்களில் ஒன்றான ஆலப்புழா, இந்த காலத்தில் மிகவும் பரபரப்பான வர்த்தக நடுவங்களில் ஒன்றாகும். இன்றும் தேங்காய் நார் தரைவிரிப்பு தொழிலுக்காகவும்,[[இறால்]] வளர்ப்பு இடத்திற்காகவும் இடமாக, தனது அழகைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சுற்றுலாவின் சிறந்த தலைமையகமான ஆலப்புழா, [[தேவாலயம்|தேவாலயங்கள்]] நிறைந்தது.
 
குறிப்பாக [[கோட்டயம்]], [[ஆறன்முளா]] நகரங்களுக்கும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை வரலாற்று அடிப்படையில், வருடாந்திர அரண்முலா பாம்பு படகு பந்தயத்திற்கு புகழ் பெற்றவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறும் பாம்பு-படகு பந்தயங்கள் நடைபெறுகின்றன. இந்த போட்டியானது, நேரு படகுப் பந்தயம் என நடைபெறுகிறது. இப்போட்டியினை இந்தியாவின் முதல் பிரதம மந்திரி [[ஜவஹர்லால் நேரு]], 1952 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பாம்பு-படகுகள், ஒவ்வொன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுக்காரர்களால் பராமரிக்கப்பட்டு, பந்தயம் நடைபெறும் நாளில், காற்றினைக் கிழித்துக் கொண்டு போவது போல, கடல் நீர் பரப்பை கிழித்துக் கொண்டு செல்வது கொள்ளை அழகாக பலராலும் எண்ணப் படுகிறது. இப்போட்டி பரபரப்பானது பல நாட்டு சுற்றுலாப்பயணிகளையும், இந்தியாவின் பல மாநில மக்களையும், ஒவ்வொரு வருடமும் கவர்ந்து இழுக்கிறது.[[செங்கன்னூர்]], ஆலப்புழாவில், [[சபரிமலை]]க்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும்.<ref>{{cite web |title=Alleppey Railway Station Details |url=http://www.indiantrains.org/station-details/?code%3DALLP%26name%3DALLEPPEY |date=2008 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20160304041400/http://www.indiantrains.org/station-details/?code=ALLP&name=ALLEPPEY |archive-date=4 March 2016 |access-date=4 நவம்பர் 2019}}</ref>
வரிசை 42:
=== குட்டநாடு ===
[[குட்டநாடு]] என்பது அலப்புழா மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதியானது அதிகப் போக்குவரவு உள்ள நீர்வழிகளால் சூழப்பட்டு உள்ளன. [[நெல்]] விளைச்சலுக்கு, இக்குட்டநாட்டு வேளாண் மக்கள் புகழ் வாய்ந்து விளங்கினர். அந்த அளவுக்கு இவ்விளைச்சல் பணியை, அர்ப்பணித்து செய்தனர். அதனால் முன்பு, இப்பகுதியானது "கேரளத்தின் நெல்லாரா" என்று அழைக்கப்பட்டது. அதாவது "கேரளாவின் அரிசி கிண்ணம்" என்பது பொருளாகும். வேளாண்மைக்கான செலவினம், உழவுத் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல காரணிகளால், இந்த விவசாயத்தை கடுமையாக பாதிப்பு அடைந்தன. பல முன்னாள் நெல் வயல்கள் இப்போது மற்ற பயிர்களுக்கு மாறி விட்டன. ஏனெனில், அவ்வகைப் பயிர்களுக்கு மிகக் குறைந்த முதலீடு இருந்தால் போதும். [[தகழி சிவசங்கரப் பிள்ளை]] என்ற கேரள இலக்கியப் படைப்பாளியின் பிறப்பிடமாகும்.<ref>https://alappuzha.nic.in/</ref>
 
 
=== வைணவத் திருத்தலங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/ஆலப்புழா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது