இரண்டாவது பால்கன் போர் ஒரு மோதலினால் உருவாகிய போர் ஆகும். [[பல்கேரியா]] நாடு, முதல் பால்கன் போரின் கொள்ளைகளில் அதற்கு அளிக்கப்பட்ட பங்கில் அதிருப்தி அடைந்து, அதன் முன்னாள் நட்பு நாடுகளான [[செர்பியா]] மற்றும் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தை]] 16 (O.S.) / 29 (N.S.) ஜூன் 1913 அன்று தாக்கியது.<ref>https://www.globalsecurity.org/military/world/war/balkan-2.htm</ref> செர்பிய மற்றும் கிரேக்கப் படைகள் பல்கேரிய தாக்குதலை முறியடித்து, எதிர் தாக்குதலாக பல்கேரிய நாட்டிற்குள் நுழைந்தது. பல்கேரியா, முன்பு ருமேனிய நாட்டுடன் பிராந்திய மோதல்களில் ஈடுபட்டிருந்தது . இது இந்த யுத்தத்தில் பல்கேரியாவுக்கு எதிராக [[ருமேனியா|ருமேனிய]] படைகளின் தலையீட்டைத் தூண்டியது. முந்தைய போரிலிருந்து இழந்த சில பிரதேசங்களை மீட்டெடுப்பதற்கான நிலைமையை ஒட்டோமான் பேரரசு பயன்படுத்திக் கொண்டது. ருமேனிய இராணுவம் தலைநகர் சோபியாவை அணுகியபோது, பல்கேரியா தற்காலிகமாக யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது, இதன் விளைவாக புக்கரெஸ்ட் உடன்படிக்கை ஏற்பட்டது<ref>https://www.britannica.com/event/Treaty-of-Bucharest-1913#ref1108577</ref>, இதில் பல்கேரியா தனது முதல் பால்கன் போர் ஆதாயங்களில் சிலவற்றை செர்பியா, கிரீஸ் மற்றும் ருமேனியாவுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. கான்ஸ்டான்டினோபிள் ஒப்பந்தத்தில், அது எடிர்னை [[ஓட்டோமான் பேரரசு|ஒட்டோமான்களிடம்]] இழந்தது. [[இரண்டாம் பால்கன் போர்|'''இரண்டாம் பால்கன் போருக்கான]]''' அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இராணுவ ஏற்பாடுகள் உலகம் முழுவதிலுமிருந்து 200 முதல் 300 போர் நிருபர்களை ஈர்த்தன.