செப்டம்பர் 2007இல், இந்திய[[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுகட்டுப்பாடு வாரியம்]] (பி.சி.சி.ஐ) [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|இந்தியன் பிரீமியர் லீக்]] என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. 20 பிப்ரவரி 2008இல் பெங்களூர்மும்பை உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன அதில் மும்பை அணியை ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் 111.9 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் அந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியாக இருந்தது. [[முகேசு அம்பானி|முகேஷ் அம்பானி]] தலைமையிலான அந்நிறுவனம் மும்பை அணியின் உரிமைக்குழுவை 10 ஆண்டுகளுக்கு வாங்கியிருந்தது. பிறகு அந்த அணிக்கு "மும்பை இந்தியன்ஸ்" என்று பெயரிடப்பட்டது.