அக்கார அடிசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
 
=== ஆண்டாள் படைத்த அக்கார அடிசில் ===
ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் (9:6)
 
'''நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்'''
 
'''நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;<ref>{{Cite web|url=https://thiruppavai.pressbooks.com/chapter/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-27/|title=|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>'''
 
'''நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்'''
 
'''எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?1'''
 
 
என்று பாடித் தனது பாடல்களினாலேயே திருமாலிருஞ்சோலைப் பெருமானுக்கு அக்கார அடிசிலைப் படைத்து வழிபட்டாள்.சொன்னேன் சொன்னேன் என்பதால் நேர்ந்து கொண்டேன் என்பதே பொருள். ஆதலால் பெருமாளுக்கு அக்கார அடிசில் படைக்க வேண்டும் என்பது அவள் விருப்பம் என்பது தெரிகிறது.
 
=== இராமானுஜர் படைத்த அக்கார அடிசில் ===
. ஸ்ரீஆண்டாளின் நேர்த்தியை அறிந்த ஸ்ரீ இராமனுஜர், அவளுடைய நேர்த்தியைப் பூர்த்தி செய்யத் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசலும், வெண்ணையும் சமர்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதை செயல் படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து “வாரும் என் அண்ணலே” என்றார். இராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும் அவர் ஆண்டாளுக்கு அண்ணனானார்.2
 
=== அக்கார அடிசில் செய்முறை ===
வரிசை 41:
 
=== தயாரிக்கும் முறை ===
பாசிப்பருப்பையும், பச்சை அரிசியையும்  வாணலியில் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். நன்கு களைந்து சுத்தம் செய்து வெண்கலப்பானையில் இட்டுப் பாலைக் கொஞ்சமாக முதலில் ஊற்றவேண்டும். தேவையான பாலில் பாதி அளவு ஊற்றிப் பால் கொதிக்க ஆரம்பித்த உடன் பாசிப்பருப்பைக் களைந்து சுத்தம் செய்து அதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை பால் அடியில் பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.  பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து அதோடு சேர்த்து விட்டு. மிச்சம் இருக்கும் பாலையும் கலந்து விட வேண்டும். அரிசி நன்கு வெந்து குழையும் பதம் வந்தபின்னர்.வெல்லத்தைத் தூளாக்கிச் சுத்தம் செய்து சேர்க்க்கவும். வெல்ல வாசனை போக நன்கு கொதிக்கவேண்டும். வெல்லம், பால் இரண்டும் சேர்ந்து வரும்வரையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து- இடை விடாமல் கிளற வேண்டும். நன்கு கலந்து பாயசம் போலவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாக உருட்டும்படியும் இல்லாமல் கையால் எடுத்துச்சாப்பிடும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பின்னர் ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கரைத்த குங்குமப் பூவும் சேர்த்துப் பச்சைக்கற்பூரமும் சேர்க்கவும். தேவைப்பட்டால் நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சை  வறுத்துச் சேர்க்கவும் வேண்டும்.3
 
=== உசாத்துணை ===
 
# ஆண்டாள் நாச்சியார் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், நாச்சியார் திருமொழி, முதல் ஆயிரம், திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்., பா. 596
# https://thiruppavai.pressbooks.com/chapter/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-27/
# http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/அக்கார_அடிசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது