'''தானியல் செல்வராசு''' (''டி. செல்வராஜ்'', பிறப்பு சனவரி 14,1938 - திசம்பர் 20 , 2019) ஓர் முற்போக்குத் [[தமிழ் மொழி|தமிழ்]] எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் [[திருநெல்வேலி|நெல்லை]] தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த<ref name="தினமலர்">{{cite web | url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=611314 | title=2012 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு | publisher=[[தினமலர்]] | work=டிசம்பர் 21, 2012 | accessdate=டிசம்பர் 22, 2012}}</ref> செல்வராஜ் [[திண்டுக்கல்|திண்டுக்கல்லில்]] வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு [[திண்டுக்கல்]] பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் [[தோல் (புதினம்)|தோல்]] என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டுள்ளது.<ref name="தினமலர்"/><ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=34665 | title=திண்டுக்கல் நாவலாசிரியர் செல்வராஜ் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது | publisher=[[தினகரன்]] | date=டிசம்பர் 22,2012 | accessdate=டிசம்பர் 22, 2012}}</ref><ref>http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sa-award2012.pdf</ref> இவர் பொதுவுடமைக்கொள்கையில் பிடிப்புடையவர்.