ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
| source = http://www.keralacm.gov.in/ems.htm கேரள அரசு தளம்
}}
'''ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாடு'''(Elamkulam Manakkal Sankaran Namboodiripad), ({{lang-ml|ഏലങ്കുളം മനക്കല്‍ ശങ്കരന്‍ നമ്പൂതിരിപ്പാട്}}) (சூன் 13, 1909 – மார்ச் 19, 1998), பரவலாக '''ஈ.எம்.எஸ் (EMS)''' என அறியப்படுபவர், ஓர் [[இந்தியா|இந்திய]] பொதுவுடமைத் தலைவர் மற்றும் முதல் [[கேரளம்|கேரள]] [[முதலமைச்சர்]] ஆவார். இவரே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசல்லாத]] முதலமைச்சராவார். இவரது சோசலிசக் கொள்கைகளுக்காகவும் [[மார்க்சியம்|மார்க்சிய]] கொள்கைகளுக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
 
== தனி வாழ்வு ==
தற்போதைய [[மலப்புறம் மாவட்டம்|மலப்புறம் மாவட்டத்தைச்]] சேர்ந்த [[பெரிந்தல்மண்ணா]] வட்டத்தில் உள்ள ஏலங்குளம் என்ற கிராமத்தில் சூன் 13, 1909ஆம் நாள் பரமேசுவரன் நம்பூதிரிப்பாட்டிற்கு மகனாகப் பிறந்தார். தமது இளவயதிலேயே தமது நம்பூதிரிப்பாடு இனத்தில் நிலவிய சாதி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராக போராடினார். முற்போக்கு நம்பூதிரி இளைஞர்களின் அமைப்பான வள்ளுவநாடு யோகச்சேம சபையின் நிர்வாகத்தில் பங்குபெற்றார். அவரது கல்லூரி நாட்களில் [[இந்திய தேசிய காங்கிரசு]] மற்றும் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை இயக்கம்]] ஆகியவற்றுடன் இணைந்திருந்தார்.
 
அவர் ஓர் எழுத்தாளர். பல இலக்கிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கேரள வரலாறு குறித்த அவரது புத்தகம் குறிப்பிடத்தக்கது.<ref name="Namboodiripad's writings" /><ref>[[ராமசந்திர குகா]], ''[[இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு]]'', p 294</ref>