துறைநீலாவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
|subdivision_name4 =
}}
 
மட்டக்களப்பின் வடக்கே இறுதி எல்லைக் பிரதேசமாகக் காணப்படுவது துறைநீலாவணைக் கிராமமாகும். இது கிழக்குப் பகுதியில் குளங்களினாலும், மேற்குப் பகுதியில் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்ற தீவாக அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு பட்டிருப்பு தேர்தல் தொகுதியில்;, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. இது வடக்கு, வடக்கு1, தெற்க்கு1, தெற்கு2 என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் முறையே 5ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம்; வட்டாரங்கள் என அழைப்பது இவ்வூர்மக்களது மரபாகும். இவ்வூரின் சனத்தொகை 2005ம் ஆண்டில்4563 ஆகும். இங்குள்ள மொத்தக் குடும்பங்கள் 1222 ஆகும். பல விவசாய நிலங்களைக் கொண்ட இக்கிராமம் பிரதான தொழிலாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதன் வரலாறு சீர்பாத குலத்தோடு தொடர்புடையது.
 
சோழ நாட்டில் இருந்து சீர்பாத தேவிக்கு துணையாக வந்தவர்கள் இறைவனது அருளால் வீரமுனை வந்து சீர்பாத குலமாகி வீரமுனையில் வாழ்ந்தமை யாவரும் அறிந்ததே. வீரமுனையில் வாழ்ந்த சீர்பாத குலத்தினர் காலத்தின் ஓட்டத்தினால் பெருகி வந்தனர். மக்களது பெருக்கத்துக்கு ஏற்ப உழுது வாழும் தொழில் வளம் வீரமுனையில் பெருகவில்லை. ஆதலினால் வீரமுனையில் வாழ்ந்தவர்களது கவனம். உழுது பயிரிடுவதற்கு ஏற்ற புதிய இடங்களை நாடுவதில் சென்றது. அதன் பயனாக மட்டக்களப்பு வாவியை அண்டிய பல இடங்கள் அவர்களது கவனத்தை கவர்ந்திழுத்தன.
 
முதலில் நீலன் அணைப்பகுதி அவர்களது நோக்கிற்கு உகந்த இடமாக தோன்றியது. ஆகவே நீலன் அணைப்பகுதிக்குச் சென்று உழுதொழில் செய்வதற்குரிய ஆயத்தங்களை ஏற்படுத்தினர். காடுகளை அளித்தும், காணிகளை செப்பனிடுவதும் பயிர்களை பாதுகாப்பதும் முதலில் சிரமமாகவே இருந்தது. ஆதலினால் நீலன் அணைப்பகுதியில் நிரந்தரமாய் குடியேறிவாழலாயினர். வளம் ததும்பிய மேற்குப்பகுதியும் அவர்களது கவனத்தை ஈர்த்தமையினால் துறையமைத்து போக்குவரத்து செய்தார்கள். அதன் பயனாக நீலன் அணையெனும் பெயர் துறைநீலன் அணையென வழங்குவதாயிற்று. காலவரையில் துறைநீலாவணையென அழைக்கப்படலாயிற்று. குடியேறிய மக்கள் சூழவுள்ள பள்ள நிலங்களை விவசாய நிலங்களாக செப்பனிட்டார்கள். மேற்குக் கரையிலுள்ள மேட்டு; வயல் வெளிகளில் மந்தை வளர்த்தார்கள். மேட்டு நிலங்களில் இல்லங்கள் அமைத்து வாழத் தொடங்கினர்.
 
மேலும் இக்கிராமம் மண்டூர் கோயில் தோற்றத்தோடு தொடர்புடையது. அதாவது சீர்பாததேவி வழிபட்டு வந்த வேலினை சிந்தன் அங்கு சீர்பாதகுலத்தவரிடையயே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எடுத்துச் சென்று தி;ல்லை மரத்தின் மீது பதித்துவைத்தான். அவ்வேலே மண்டூர் கந்த சுவாமிகோயிலில் வழிபாட்டுக்குரிய வேலாக விளங்குகின்றது. அவ்வேலினைக் கொண்டுவந்த சிந்தன் துறைநீலாவணையிலேயே வாழ்ந்தான் இதனால் இங்கு சிந்தாத்திரன் குடியானவர்கள் அதிகளவாக வாழ்கின்றனர்.
 
சிந்தாத்திரன், பழச்சிகுடி, காலதேவன்குடி, படையாண்ட குடி, கங்கேயன்குடி, பரதேசிகுடி, வெள்ளாகிகுடி, நரையாகி குடி, ஞானி குடி, பாட்டுவாழி குடி, முடவன் குடி என 11 குடிகளை துறைநீலாவணைச் செப்போடு கூறுகின்றது. துiநீலாவணைக் கிராமத்திலே சிந்தாத்திரன், பாட்டுவாழி, முடவன் குடியினரே அதிக முக்கியத்துவத்தினை உடையவர்களாகக் காணப்படுகின்றனர், இவர்களே கண்ணகியம்மன் ஆலய நிருவாகிகளாகவும் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/துறைநீலாவணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது