முற்காலத்தில் இலங்கை, லங்காபுரிஇலங்காபுரி, லங்கா, இலங்கேஸ்வரம், இராவணதீவு, இராவணநாடு, இராவணபுரி, இராவணபூமி, இரத்னபுரி, சிங்களநாடு, சிங்களதீவு, சிங்களபிரதேசம், நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் ([[கிரேக்கம்|கிரேக்கர்]]களால்), செரெண்டிப் ([[அராபியர்]]களால்), சேரன்தீவு உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் [[1972]] ஆம் ஆண்டில் இலங்கை ஒரு [[குடியரசு|குடியரசாக]] அறிவிக்கப்படும் வரை ஆங்கிலேயர்களால் ஆங்கிலத்தில் ''சிலோன்'' என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் ''சிலோன்'' என்பது பயன்படுத்தப் படுகிறது). அதன் அமைவின் காரணமாக "இந்து சமுத்திரத்தின் நித்திலம்" என்ற புகழும் இதற்கு உண்டு.