ரேசா ஷா பகலவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரேசா ஷா பகலவி''' ('''Reza Shah Pahlavi'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:23, 27 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ரேசா ஷா பகலவி (Reza Shah Pahlavi (பாரசீக மொழி: رضا شاه پهلوی‎; pronounced [reˈzɑː ˈʃɑːhe pæhlæˈviː]; 15 மார்ச் 1878 – 26 சூலை 1944), ஈரான் நாட்டை 15 டிசம்பர் 1925 முதல் 16 டிசம்பர் 1941 முடிய ஆண்ட பகலவி வம்சத்தின் முதல் மன்னர் ஆவார். [1][2] ரேசா ஷா பகலவி 1921 ஆண்டு முதல் ஈரானை ஆண்ட குவாஜர் வம்சத்தின் இறுதி மன்னர் அகமது ஷா குவாஜரின் பிரதம அமைச்சராக பதவி வகித்தவர் 1925-இல் ஈரான் நாட்டின் சட்டமன்றம், மன்னர் அகமது ஷா குவாஜரை மன்னர் பதவியிலிருந்து நீக்கியதுடன், ரேசா ஷா பகலவியை ஈரானின் முடி மன்னராக அறிவித்தது.

இவரது ஆட்சியில் ஈரானை மேற்கத்திய பாணியில் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியலில் முன்னேற்ற வழியில் அழைத்துச் சென்றார். இவர் நவீன ஈரானை நிறுவுவதில் நாட்டம் கொண்டவர். இவருக்குப் பின் இவரது மகன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1979-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையில் நடைபெற்ற ஈரானிய மக்கள் புரட்சியால், மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகழிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [3]

மேற்கோள்கள்

  1. Pahlavi dynasty
  2. Pahlavi Dynasty
  3. "Iran marks Islamic Republic Day". Press TV. 1 April 2013. http://www.presstv.com/detail/2013/04/01/295997/iran-marks-islamic-republic-day/. பார்த்த நாள்: 21 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேசா_ஷா_பகலவி&oldid=2901772" இலிருந்து மீள்விக்கப்பட்டது