புனித ஜார்ஜ் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
'''புனித ஜார்ஜ் கோட்டை''' (''Fort St. George''), இந்தியாவில் [[பிரித்தானியர்|பிரித்தானியரின்]] முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் [[1639]] ஆம் ஆண்டில் கரையோர நகரான [[மதராஸ்|மதராசில்]] (இன்றைய [[சென்னை]] நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் [[கோட்டை]] கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், [[வணிகம்|வணிக]] நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
 
[[1600]] ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]] சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவவதற்காக, [[மலாக்கா நீரிணை]]க்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். கோட்டை [[புனித ஜார்ஜ் நாள்|புனித ஜார்ஜ் நாளான]] [[ஏப்ரல் 23]] ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு ''புனித ஜார்ஜ் கோட்டை'' எனப் பெயரிடப்பட்டது.
 
கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே [[ஜார்ஜ் டவுன்]] என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், [[ஆர்க்காடு]] மற்றும் [[ஸ்ரீரங்கப்பட்டினம்|ஸ்ரீரங்கப்பட்டின]] அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.6 [[மீட்டர்]] உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, [[18ம் நூற்றாண்டு|18 ஆம் நூற்றாண்டில்]] இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.
"https://ta.wikipedia.org/wiki/புனித_ஜார்ஜ்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது