* குமரி எல்லை மீட்பிற்கு உதவிய பர்தா <br />கேரளாவின் பட்டம் தாணுபிள்ளையின் அரசு கவிழ்ந்தால் குமரி பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்து விடும் என்ற நிலையில் பட்டம் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது பல எதிரணி சட்டமன்ற உறுப்பினர்களை சிறைசெய்து பட்டம் அரசு முடக்கிவிட்டது குமரி எல்லை மீட்பு போரை முன்னின்று நடத்திய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வக்கீல் ராமசாமி பிள்ளை போலீஸ் தேடலில் இருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். தீர்மானம் கொண்டுவரப்பட்ட நாளில் முஸ்லீம் பெண் போல் பர்தா அணிந்து சட்ட சபைக்குள் நுழைந்து அரசை எதிர்த்து வாக்களித்தார். பட்டம் அரசு கவிழ்ந்தது பர்தா அணிந்து வந்த இவரது ஒரு வாக்கு விழாமல் இருந்திருந்தால் பட்டம் அரசு கவிழ்ந்திருக்காது புதிய தேர்தலும் வந்திருக்காது என்கின்ற வகையில் பர்தா தமிழ் நில எல்லை மீட்பிற்கும் உதவி இருக்கிறது .