இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட [[சமஸ்கிருதம்]] கி.மு., 31500 முதல் கி.மு 2200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 2500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் [[இராமாயணம்]] , [[மகாபாரதம்]] போன்ற [[இதிகாசம்|காப்பியங்கள்]] செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் [[கல்கத்தா]]வில் [[1784]] -ல் [[ஆசியா|ஆசியக்]] [[கல்வி]]ச் [[சங்கம்]] எனும் [[நிறுவனம்|நிறுவனத்தை]] உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை [[ஆங்கிலம்]] , [[ஜெர்மன்]] , [[பிரெஞ்ச்]] போன்ற [[ஐரோப்பியா|ஐரோப்பிய]] மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித [[நூல்கள்]] என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். [[இலக்கியம்]] , [[தத்துவம்]] , [[அரசியல்]] போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு [[வேதம்]] , [[உபநிடதம்]] , [[இதிகாசங்கள்]] , [[காப்பியம்|காப்பியங்கள்]] , [[நாடகங்கள்]] , [[தத்துவம்|தத்துவ]] நூல்கள், [[நீதி]] நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தைச் செம்மொழியாகக் கருதச் செய்தன.