சிரிக்கும் புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன |
||
வரிசை 3:
===வரலாறு===
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று [[பாபா அணு ஆராய்ச்சி மையம்|பாபா அணு ஆராய்ச்சி மைய]]த்தில் பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார். இதற்கு முன்னர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]] ஆகிய நாடுகள் இந்திய அணுமின் திட்டத்துக்கு தொழிற்நுட்ப ஆதரவளித்த போது, அந்த தொழில் நுட்பத்தை போர் காரணங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தன. அவற்றை அணுகுண்டு செய்வதற்கு பயன்படுத்துவது அந்த நிபந்தனைகளை மீறும் செயலாகும். எனவே அணுகுண்டு சோதனையை “அமைதியான அணுக்கரு வெடிப்பு” (Peaceful nuclear explosion) என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. மேலும் [[புத்தர்]] பிறந்த புத்த பூர்ணிமா தினத்தில் இவ்வெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டதால் இதனை சூசகமாக சிரிக்கும் புத்தர் என்றும் அழைத்து வந்தனர்.
===இந்திய வல்லுனர்களின் குழு===
|