[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் அப்போதைய காலகட்டத்தில் இருந்து வந்த நீக்ரோக்களை அடிமையாக வைத்திருக்கும் முறையின் யதார்த்த கொடுமைகளையும், அடிமைகளை விற்கும் போது அவர்களது குடும்பமும் உறவினர்களும் எதிர்கொள்ளும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நூலில் காணலாம். வெளித்தோற்றத்திற்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முரட்டுத்தனமான சிறுமி, தான் கறுப்பின அடிமை என்பதால் புறக்கணிக்கப்படுவதை உணருவதும், முரட்டுத்தனத்தாலும், திருட்டு முதலான செயல்களாலும் தனது வெறுப்பை வெளிக்காட்டுவதுமாக இருக்கிறாள். இவளைப் போன்றே பல கிளைக் கதாபாத்திரங்களுக்கு இடையே, டாம் மாமா எனும் முக்கிய கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுகிறார். டாம் மாமா, தம் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறார். அதில் தொடங்கி, தமது குடும்பத்தினருடன் சேர முடியும் என்று டாம் மாமா எதிர்பார்ப்போடு செயல்படுவது வரையிலும் கதை தொடர்கிறது. அவர் சந்தித்த ஏமாற்றங்களும் கதையில் அறிய முடிகிறது. இதன் மூலம் அடிமை முறையின் சிரமங்களை வாசகர்களுக்கு உணர வைக்கும் நூலாக அமைத்துள்ளார் நூல் ஆசிரியர்.
அடிமையாக வைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் கடும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கட்டங்களில், ஆசிரியர் "இவர்கள் உங்கள் உறவினர்களாக இருந்திருந்தால்" எனும் கருத்தை எழுப்புவதன் மூலம் வாசகர்களைப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்வு பூர்வமாக உணர வைக்கிறார்.