இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு மொழிதெலுங்கு,)
வரிசை 59:
 
[[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] தமது செய்கைகளை 14 சூன் 1938 அரசாணையில் இவ்வாறு விளக்கியிருந்தார்:
<blockquote> இந்திய தேசிய வாழ்வில் இம்மாநிலம் தனக்கு சரியான இடத்தைப் பெற, நமது கல்விபெற்ற இளைஞர்கள் இந்தியாவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியில் நடைமுறை அறிவு பெற்றிருத்தல் இன்றியமைததாகும். எனவே அரசு நமது மாநில இடைநிலைப்பள்ளி பாடதிட்டத்தில் [[இந்துஸ்தானி]]யைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. எந்தவொரு தொடக்கப்பள்ளியிலும் இந்திப்பாடம் இருக்காது, [[தாய்மொழி]]யில் மட்டுமே கற்பிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த அரசு விரும்புகிறது. [[இந்தி]] இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே அதுவும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிவங்களில், அதாவது பள்ளிவாழ்வின் 6வது, 7வது, 8வது ஆண்டுகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். எனவே இடைநிலைப்பள்ளிகளிலும் [[தாய்மொழி]]க் [[கல்வி]]க்கு இது எந்தவிதத்திலும் குறிக்கீடாக இருக்காது. [[இந்தி]] வகுப்புகளில் வருகை கட்டாயம் என்றளவில் மட்டுமே கட்டாயமே தவிர மாணவர்கள் [[தமிழ்]], [[தெலுங்கு மொழிதெலுங்கு]], [[மலையாளம்]] அல்லது [[கன்னடம்|கன்னடத்திற்கு]] மாற்றாக இந்திப் பாடத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது, அவற்றில் ஒன்றுடன் கூடுதலாகவே இந்தியைப் பயிலவேண்டும்.<ref name="ramaswamy421"/></blockquote>
 
அவர் போராட்டக்காரர்களின் குறைகளைக் கேட்க மறுத்தார். அவர்கள் தங்கள் "ஆரிய எதிர்ப்பு சாய்வு"களாலும் "காங்கிரசு வெறுப்பினாலும்" தூண்டப்பட்டவர்களாக இருப்பதாகக் கூறினார்.<ref name="ramaswamy421"/> 1,198 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்;அவர்களில் 1,179 பேர் தண்டிக்கப்பட்டனர். சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 73 பேர் மகளிராவர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுடன் (32 குழந்தைகள்) சிறை சென்றனர்.<ref name="sarkar"/>). பெரியாருக்கு ஓராண்டு கடும் உழைப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.<ref name="baliga2">{{cite book | first= B. S. | last=Baliga| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Tamil Nadu district gazetteers, Volume 2|edition= | publisher=Superintendent, Govt. Press| location= | id= | pages=85| url=http://books.google.com/books?id=M2VDAAAAYAAJ}}</ref> போராட்டக்காரர்களின் கூட்டங்களுக்கு எதிராக [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] [[இந்துஸ்தானி]] ஆதரவு கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.<ref name="more"/>
வரிசை 119:
}}</ref>
 
அரசியலமைப்பின் 343வது உட்பிரிவில் வரையறுக்கப்பட்டவாறு, முதல் அலுவலக மொழி ஆணையத்தை பி. ஜி. கேர் என்பவர் தலைமையில் 7 சூன், 1955ல் நேரு அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையை 31 சூலை, 1956 அன்று அளித்தது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணர ஆணையம் பல வழிகளைக் குறிப்பிட்டிருந்தது (ஆணையத்தின் இரு இந்தி பேசாத உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து [[பி. சுப்பராயன்]], [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலிருந்து]] சுனிதி குமார் சாட்டர்ஜி, ஒப்புமை இல்லா குறிப்புக்கள் அளித்திருந்தனர்.<ref name="simpson"/>).<ref name="kumar">{{cite book | first=Virendra| last=Kumar| authorlink=| coauthors= | origyear=| year=1993| title= Committees and commissions in India |edition= | publisher=Concept Publishing Company| location= | id= {{ISBN|8175963123}} {{ISBN|9788175963122}}| pages=53–66| url=http://books.google.com/books?id=AXa6g_lJOWAC&pg=PA53&lpg=PA53}}</ref> கேர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்ய [[கோவிந்த் வல்லப் பந்த்]] தலைமையிலான அரசுமொழிக்கான நாடாளுமன்றக் குழு செப்டம்பர் 1957ல் அமைக்கப்பட்டது. அக்குழு இரு ஆண்டுகள் விவாதித்து 8 பிப்ரவரி 1959ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. அது இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை துணைமொழியாகவும் பரிந்துரைத்தது. கேர் மற்றும் பந்த் அறிக்கைகள் இரண்டுமே சுனிதி சாட்டர்ஜி, சுப்பராயன், பிராங்க் அந்தோணி போன்ற [[இந்தி]] பேசாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1956ஆம் ஆண்டு நடந்த ஓர் மாநாட்டில் '[[தெலுங்கு]] அகாதெமி' இந்தி மட்டும் அலுவலக மொழியாவதை எதிர்த்தது. முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] இவ்வமயம் ஆங்கில மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக, [[தமிழ்]], [[தெலுங்கு மொழிதெலுங்கு]], [[மலையாளம்]], [[அசாமிய மொழி|அசாமி]], [[ஒரியா]], மராத்தி, கன்னட மற்றும் வங்காள மொழியினரைக் கொண்ட அனைத்திந்திய மாநாடு ஒன்றை 1958ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடத்தினார். அப்போது "''இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு [[ஆங்கிலம்]] அந்நிய மொழியோ அதேயளவில் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே ''என முழங்கினார்."<ref name="annamalai1"/><ref name="simpson">{{cite book | first=Andrew| last=Simpson | authorlink=| coauthors= | origyear=| year=2007| title=Language and national identity in Asia |edition= | publisher=Oxford University Press| location= | id={{ISBN|0199267480}}, {{ISBN|9780199267484}}| pages=71| url=http://books.google.com/books?id=F3XvBbdWCKYC}}</ref><ref name="fishman">{{cite book | first=Joshua A. | last=Fishman| first2=Andrew W.| last2=Conrad|first3=Alma| last3=Rubal-Lopez|authorlink=| coauthors= | origyear=| year=1996| title= Post-imperial English: status change in former British and American colonies, 1940-1990 |edition= | publisher=Walter de Gruyter| location= | id= {{ISBN|3110147548}} {{ISBN|9783110147544}}| pages=564| url=http://books.google.com/books?id=SIu244rlVu8C&pg=PA564}}</ref>
 
இந்தித் திணிப்பு எதிர்ப்பு வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]], [[இந்தி]] பேசாதவர்களின் கவலையைப் போக்குவதற்கு முயன்றார். 'பந்த் குழு அறிக்கை' மேலான நாடாளுமன்ற விவாதத்தில், செப்டம்பர் 1959இல் கீழ்வரும் உறுதிமொழியைக் கொடுத்தார்.<ref name="timeline1"/>: