இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 119:
}}</ref>
 
அரசியலமைப்பின் 343வது உட்பிரிவில் வரையறுக்கப்பட்டவாறு, முதல் அலுவலக மொழி ஆணையத்தை பி. ஜி. கேர் என்பவர் தலைமையில் 7 சூன், 1955ல் நேரு அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையை 31 சூலை, 1956 அன்று அளித்தது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணர ஆணையம் பல வழிகளைக் குறிப்பிட்டிருந்தது (ஆணையத்தின் இரு இந்தி பேசாத உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து [[பி. சுப்பராயன்]], [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலிருந்து]] சுனிதி குமார் சாட்டர்ஜி, ஒப்புமை இல்லா குறிப்புக்கள் அளித்திருந்தனர்.<ref name="simpson"/>).<ref name="kumar">{{cite book | first=Virendra| last=Kumar| authorlink=| coauthors= | origyear=| year=1993| title= Committees and commissions in India |edition= | publisher=Concept Publishing Company| location= | id= {{ISBN|8175963123}} {{ISBN|9788175963122}}| pages=53–66| url=http://books.google.com/books?id=AXa6g_lJOWAC&pg=PA53&lpg=PA53}}</ref> கேர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்ய [[கோவிந்த் வல்லப் பந்த்]] தலைமையிலான அரசுமொழிக்கான நாடாளுமன்றக் குழு செப்டம்பர் 1957ல் அமைக்கப்பட்டது. அக்குழு இரு ஆண்டுகள் விவாதித்து 8 பிப்ரவரி 1959ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. அது இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை துணைமொழியாகவும் பரிந்துரைத்தது. கேர் மற்றும் பந்த் அறிக்கைகள் இரண்டுமே சுனிதி சாட்டர்ஜி, சுப்பராயன், பிராங்க் அந்தோணி போன்ற [[இந்தி]] பேசாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1956ஆம் ஆண்டு நடந்த ஓர் மாநாட்டில் '[[தெலுங்கு மொழி|தெலுங்கு]] அகாதெமி' இந்தி மட்டும் அலுவலக மொழியாவதை எதிர்த்தது. முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] இவ்வமயம் ஆங்கில மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக, [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[அசாமிய மொழி|அசாமி]], [[ஒரியா]], மராத்தி, கன்னட மற்றும் வங்காள மொழியினரைக் கொண்ட அனைத்திந்திய மாநாடு ஒன்றை 1958ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடத்தினார். அப்போது "''இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு [[ஆங்கிலம்]] அந்நிய மொழியோ அதேயளவில் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே ''என முழங்கினார்."<ref name="annamalai1"/><ref name="simpson">{{cite book | first=Andrew| last=Simpson | authorlink=| coauthors= | origyear=| year=2007| title=Language and national identity in Asia |edition= | publisher=Oxford University Press| location= | id={{ISBN|0199267480}}, {{ISBN|9780199267484}}| pages=71| url=http://books.google.com/books?id=F3XvBbdWCKYC}}</ref><ref name="fishman">{{cite book | first=Joshua A. | last=Fishman| first2=Andrew W.| last2=Conrad|first3=Alma| last3=Rubal-Lopez|authorlink=| coauthors= | origyear=| year=1996| title= Post-imperial English: status change in former British and American colonies, 1940-1990 |edition= | publisher=Walter de Gruyter| location= | id= {{ISBN|3110147548}} {{ISBN|9783110147544}}| pages=564| url=http://books.google.com/books?id=SIu244rlVu8C&pg=PA564}}</ref>
 
இந்தித் திணிப்பு எதிர்ப்பு வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]], [[இந்தி]] பேசாதவர்களின் கவலையைப் போக்குவதற்கு முயன்றார். 'பந்த் குழு அறிக்கை' மேலான நாடாளுமன்ற விவாதத்தில், செப்டம்பர் 1959இல் கீழ்வரும் உறுதிமொழியைக் கொடுத்தார்.<ref name="timeline1"/>: