இரண்டாம் இராஜேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
''கோப்பரகேசரி வர்மன்'' '''இரண்டாம் இராஜேந்திர சோழன்''' முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனும், முதலாம் [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] பேரனும் ஆவான். சோழ மன்னனாயிருந்த இவனது அண்ணன் [[மேலைச் சாளுக்கியர்|சாளுக்கிய]]மன்னனான [[முதலாம் சோமேசுவரன்|முதலாம் சோமேசுவரனுடனான]] போரொன்றில் கொல்லப்பட, போரைத் தொடர்ந்து நடத்திச் சோழர்களின் தோல்வியைத் தவிர்த்தவன் இவன். கி.பி 1054 இல் போர்க் களத்திலேயே சோழ நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொண்ட இவன் 1064 ஆம் ஆண்டுவரை ஆட்சி நடத்தினான்.
 
இவன் காலத்திலும், மேற்குச் சாளுக்கியருடனான சோழரின் பகைமை நீடித்திருந்தது. அவர்களுடன் போரிட்டு வெற்றியும் பெற்றுள்ளான். [[கீழைச் சாளுக்கியர்|கீழைச் சாளுக்கியருடனான]] உறவு நல்ல நிலையில் இருந்தது. தனது மகளான மதுராந்தகி என்பவள் கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்கன்]] என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_இராஜேந்திர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது