எகிப்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 1:
'''எகிப்தின் வரலாறு''' நீண்டதும் வளம் பொருந்தியதும் ஆகும், வளமான கரைப் பகுதிகளையும், வடிநிலங்களையும் கொண்ட நைல் நதியும், [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] மூத்தகுடிகளின் சாதனைகளும், வெளிச் செல்வாக்கும் இதற்குக் காரணமாக இருந்துள்ளன. ரோசெத்தாக் கல்லைக் கண்டுபிடித்ததன் மூலம், பண்டை எகிப்தியப் படஎழுத்துக்களின் மர்மங்கள் அவிழ்க்கப்படும்வரை எகிப்துன் பழைய வரலாற்றின் பெரும் பகுதி அறியப்படாததாகவே இருந்தது. உலகின் ஏழு அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது எகிப்தில் உள்ள [[கீசாவின் மாபெரும் பிரமிட்]] மட்டுமே. அலெக்சாண்டிரியாவின் நூலகம், அந்த வகைக்கு ஒன்றே ஒன்றாகப் பல நூற்றாண்டுகள் இருந்தது.
 
எகிப்தில், ஆட்டேரியக் கருவி உற்பத்தியோடு கூடிய மனிதக் குடியேற்றம் குறைந்தது கிமு 40,000 வரை பழமையானது. கிமு 3,150-இல்[[எகிப்தின் முதல் வம்சம்|எகிப்தின் முதல் வம்சத்தின்]] முதல் [[பார்வோன்|பாரோவான]] [[நார்மெர்|நார்மரின்]] [[கீழ் எகிப்து]] மற்றும் [[மேல் எகிப்து| மேல் எகிப்தும்]] அரசியல் ரீதியாக ஒன்றாக இணைந்ததோடுஇணைத்ததோடு, பண்டை எகிப்திய நாகரிகம் ஒன்றானது. கிமு[[பண்டைய ஆறாம் நூற்றாண்டில்எகிப்து|பண்டைய எகிப்தை]] கிமு 525-இல் பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு]] கைப்பற்றும் வரை, எகிப்தில் தாயக எகிப்தியரின்மக்களான [[எகிப்தில் முதல் வம்சம்]] முதல் [[எகிப்தின் இருபத்திறாம் வம்சம்|இருபத்திறாம் வம்சத்தவர்களின்]] ஆட்சியே நிலவியது. கிமு 332 இல், மசிடோனிய ஆட்சியாளரான [[மகா அலெக்சாந்தர்]], [[அகாமனிசியப் பேரரசு|ஆக்கிமெனிட்டுகளை]] வீழ்த்தி எகிப்தைக் கைப்பற்றினார். அலெக்சாந்தரின் இறப்பிற்கு பின்னர், கிமு 336-இல் கிரேக்கப்படைத்தலைவர் [[தாலமி சோத்தர்]], எகிப்தில் [[தாலமைக் பேரரசு]] நிறுவினார். தொலமிகள், உள்ளூர் கலகக்காரர்களுக்கு முகம்கொடுக்கவேண்டி இருந்ததுடன், வெளியாருடனான போர்களிலும், உள்நாட்டுப் போர்களிலும் ஈடுபட்டதனால், இராச்சியம் வீழ்ச்சியடையத் தொடங்கி இறுதியாக கிமு 33-இல் எகிப்தை [[உரோமைப் பேரரசு|உரோமப் பேரரசு]] தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிளியோபாட்ரா இறந்த பின்னர் பெயரளவிலான எகிப்தின் சுதந்திரம் முடிவுக்கு வந்து, எகிப்து, உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது.
 
எகிப்தில் உரோமரின் ஆட்சி, இடையே [[சாசானியப் பேரரசு|சசானியப் பேரரசின்]] கிபி 619 - 629 வரையான 10 ஆண்டுக் காலப்பகுதி தவிர, கிமு 30 முதல் கிபி 641 வரை நீடித்திருந்தது. எகிப்தை முசுலிம்கள் கைப்பற்றிய பின்னர், எகிப்தின் பகுதிகள், தொடர்ந்து வந்த [[கலீபா|கலீபகங்களினதும்]], பிற முசுலிம் வம்சங்களினதும் மாகாணங்கள் ஆயின. இவற்றுள் [[ராசிதீன் கலீபாக்கள்]] (632-661), [[உமையா கலீபகம்]] (661-750), [[அப்பாசியக் கலீபகம்]] (750-1258), [[குர்துபா கலீபகம்]] (756-1031), [[பாத்திம கலீபகம்]] (909-1171), [[அய்யூப்பிய வம்சம்|அய்யூப்பிய வம்சத்தின்]] [[எகிப்தின் மம்லுக் சுல்தானகம்]] (கிபி 1250 - 1517) என்பன இவற்றுள் அடக்கம். 1517 இல் துருக்கியின் ஓட்டோமான் சுல்தான் முதலாம் செலீம் [[கெய்ரோ]]வைக் கைப்பற்றியதன் மூலம் எகிப்தை [[உதுமானியப் பேரரசு|ஓட்டோமான் பேரரசுக்குள்]] இணைத்துக்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது